Followers

Wednesday, December 24, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      என் உள்மனதில் ஒரு கேள்வி எழுந்தது. யாராவது இதனை கேட்பார்கள் என்று நான் எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் ஒருவரும் இதனைப்பற்றி கேள்வி கேட்கவில்லை. சரி நாமே எழுதிவிடலாம் என்று எழுதிவிட்டேன்.

நாம் கோவில்கள் போல் வீடு இருக்கவேண்டும் என்று சொல்லுகிறோம். பிரபஞ்சத்தின் சக்தியை வெளிப்படுத்துவதற்க்கு கோவிலை கட்டி வைத்துள்ளனர். கோவிலில் தவறு நடப்பதற்க்கு வழி இல்லை ஆனால் நாம் வீட்டில் தவறு செய்வோம் அதனால் நமக்கு பாதிப்பு வராதா என்ற கேள்வி தான் அது. நீங்கள் கேட்கவில்லை நானே கேட்டுக்கொண்டு எழுதிவிட்டேன்.

இல்லறத்தில் இருப்பவர்கள் காமத்தில் ஈடுபட செய்வார்கள். காமம் ஒன்றும் பிரபஞ்ச சக்திக்கு எதிரி கிடையாது. கோவில்களில் பள்ளியறை என்ற ஒன்று இருக்கும். அது எப்பொழுதும் மூடி தான் இருக்கும். இரவில் அந்த அறையை திறந்து பூஜை செய்வார்கள். கடவுளுக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டு கட்டப்படுகிறது. அதுப்போல் நீங்களும் பெட்ரூம் கட்டி வைத்துள்ளீர்கள். பிரபஞ்ச சக்தியால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

பிரபஞ்ச சக்தியுடன் ஒரு வீடு அமைக்கப்பட்டால் உங்களின் இல்லறம் நன்றாக இருக்கும் அதே நேரத்தில் உங்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: