Followers

Tuesday, December 16, 2014

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                      சனி பரிகாரம் நிறைய உங்களுக்கு கொடுத்து இருந்தாலும் புதிய ஒரு பரிகாரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி என்றாலே குளிர் தான். சனிகிரகம் ஒருவருக்கு தீங்கு செய்கிறது என்றால் அவர்க்கு சளி தான் முதலில் பிடிக்கும். அதன் பிறகு தான் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கும். 

உடலில் சளி இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறதே அந்த இடத்தை அரித்துவிடும் தன்மை உடையது. சனிக்கிரகம் சளியை கொடுத்து தொல்லை செய்யும்.

கிராமங்களில் ஒரு பழமொழியை சொல்லுவார்கள். செருப்படிக்கு மிஞ்சிய ஒரு அடி கிடையாது. சூட்டிற்க்கு மீறிய ஒரு வைத்தியம் கிடையாது என்பார்கள். அதாவது ஒருத்தரை அடிக்கவேண்டும் என்றால் செருப்பால் அடித்தால் நல்ல அடிக்கலாம் என்பார்கள். மருத்துவத்தில் சூடு வைத்து மருத்துவம் செய்தால் அந்த மருத்துவத்தை மிஞ்சிய ஒரு மருத்துவம் கிடையாது என்பார்கள்.

ஒருவர் இறக்க போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக சூடு வைத்து கொடுத்தால் போகின்ற உயிர் திரும்பி வரும். சிறிது நேரம் கழித்து தான் இறப்பார். வெப்பத்தை வைத்து நிறைய வைத்தியம் செய்யலாம். உதாரணத்திற்க்கு இதனை சொன்னேன்.

சூட்டை கொண்டு தான் உடல் இயங்குகிறது. அந்த சூட்டை உடலுக்கு கொடுக்கும்பொழுது நமக்கு சனியின் பாதிப்பு குறையும். உடலுக்கு குளிரை கொடுப்பது சனி. உடல் இயங்க வெப்பம் வேண்டும். வெப்பம் குறையும்பொழுது அது நோயாக நமக்கு உருவாகிறது. சனிக்கு சரியான பரிகாரம் என்றால் வெப்பத்தை கொடுப்பது தான் அதனால் வெப்பத்தை தருகின்ற மாதிரி உள்ள விசயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு நீங்கள் உடலுக்கு கொடுத்து வாருங்கள். உங்களுக்கு சனியால் ஏற்பட்ட பாதிப்பு குறையும்.

தொடர்ந்து இதன் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: