Followers

Friday, December 26, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                       சிவன் கோவிலுக்கு போனால் எப்படி நமக்கு தோன்றுகிறதோ அதேப்போல் தேவாலயத்திற்க்கு (சர்ச்) சென்றாலும் தோன்றுவது போல் அவர்களும் செய்து வைத்திருக்கிறார்கள். எந்த மதம் ஆனாலும் இப்படி தான் செய்து வைக்கிறார்கள்.

கட்டிடங்கள் தான் அப்படி செய்கின்றனவே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதனை நன்கு அறிந்த ஞானிகள் தான் உனக்குள் தேடு வெளியில் தேடாதே என்று சொல்லி வைத்தனர்.

பிரபஞ்ச சக்தியை வெளிப்படுத்துவது போல் கட்டிடங்களை உலகத்திற்க்கு அறிமுகப்படுத்தியது இந்தியர்கள் தான். நம்ம ஆட்களிடம் இதனை கற்று அனைவரும் இதனை பயன்படுத்தி வருகின்றார்கள்.

பொதுவாக மதங்களை வைத்து தொழில் செய்வதும் சாமியார்கள் ஆசிரமங்களை வைத்து தொழில் செய்வதும் ஒரு சில சின்ன டிரிக் மட்டுமே தானே தவிர அதில் விஷேசமாக ஒன்றும் இருக்காது. சின்ன சின்ன விசயங்களில் கவனத்தை செலுத்தி கோவில்கள் மற்றும் ஆசிரமங்களை கட்டி வைத்துவிடுவார்கள். நீங்கள் உள்ளே சென்றவுடன் சாமிக்கிட்ட பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்களும் நம்பி வரவேண்டியது தான்.

ஒரு சில ஆசிரமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் கட்டிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டி வைத்திருப்பார்கள். என்ன காரணம் என்றால் வரும் அனைவரும் அந்த கட்டிடங்களுக்குள் உள்ளே வந்தவுடன் அவர்களின் மனம் அமைதி அடைந்துவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

பிரபஞ்ச சக்தி உங்களின் வீட்டிற்க்குள்ளும் அமைத்துக்கொண்டு நீங்களும் அமைதியாக ஆனந்தத்தோடு வாழுங்கள்.

நாளை மதுரையில் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: