Followers

Monday, December 8, 2014

சந்திக்கிறேன்


வணக்கம் நண்பர்களே!
                      நண்பர் பரமேஸ்வரர் கேட்டார் திருப்பூர் என்றால் பிடித்து இருக்கிறதா என்று கேட்டார். எனக்கு எல்லா ஊருவும் பிடிக்கும். திருப்பூரில் தொழில் செய்யும் நண்பர்கள் அதிகம் பேர் என்னை தொடர்புக்கொள்வதால் அவர்களின் தேவைக்காக திருப்பூர் அடிக்கடி வருகிறேன். 

நான் கற்றவித்தை அதிகளவில் தொழில் செய்யும் நண்பர்களுக்கு தான் பயன்படும் விதத்தில் இருப்பதால் தொழில் அதிகம் நடக்கும் ஊர்களில் நான் அடிக்கடி வருகிறேன். சாதாரணமானவர்களுக்கும் செய்துக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.  

தொழில் செய்யும் நண்பர்களின் தேவை அதிகளவில் இருக்கும்பொழுது அதிகநாட்கள் தேவைப்படுகிறது. சாதாரணமாக வருபவர்களுக்கு எளிதில் வேலை முடிந்துவிடும். நான் ஒவ்வொரு ஊருக்கும் தொழில் செய்பவர்களுக்கு செல்லும்பொழுது ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்களையும் சந்திக்கவேண்டும் என்பதற்க்காக பதிவில் இந்த ஊரில் இருக்கிறேன் என்று சொல்லுகிறேன். 

ஜாதககதம்பத்தை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அதனால் வரும் அனைத்து நண்பர்களையும் சந்தித்துவிடுவது எனது இயல்பு.

ஒவ்வொரு ஊர்களில் உள்ள நண்பர்கள் அந்த ஊர்களுக்கு வரும்பொழுது என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன்.

கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர்களுக்கு: இன்று உங்களின் ஊரில் இருக்கிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: