Followers

Tuesday, December 2, 2014

கண் திருஷ்டி


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது அவனின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை விட அவனுக்கு ஏற்படும் கண் திருஷ்டி காரணமாக இருக்கும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் வேலையை காட்டுவது எப்பொழுதாவது ஒரு முறை நடக்கும். ஒவ்வொரு சோதிடர்களும் அந்த தோஷத்தை வைத்தே உங்களை பயமுறுத்திக்கொண்டிருப்பார்கள் ஆனால் அந்த தோஷத்தை விட உங்களுக்கு வரும் கண் அடி அதிகமாக உங்களை கீழே தள்ளிவிட்டுவிடும்.

பழங்காலத்தில் கண் திருஷ்டியை எடுக்க ஒவ்வொரு குடும்பங்களிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் செய்துக்கொண்டு இருப்பார்கள். இந்த காலத்தில் அதனை மறந்தே போய்விட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனின் மனமும் ஏதாவது ஒன்றை சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. அந்த சிந்தனை நல்ல சிந்தனையாக இருந்தால் பரவாயில்லை. நம்மை பொறாமை கண்ணோட்டத்தாேடு பார்க்கும் பார்வை நமது வளர்ச்சியை தடுத்து வீழ்த்திவிடுகிறது.

பொறாமையால் பார்க்கும்பொழுது அவர்களின் தீய எண்ணங்கள் நமது சூட்சம சரீரத்தை பாழாக்கிறது. சூட்சம சரீரம் பாழ்பட்டாலே உங்களின் முன்னேற்றம் தடைப்பட்டுவிடும். சூட்சம சரீரம் நன்றாக இருந்தால் அதே நேரத்தில் பாதுகாப்பாக இருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை இயற்கையே கொடுத்துவிடும்.

சூட்சம சரீரம் நன்றாக இருப்பதற்க்கு முதலில் செய்யவேண்டியது உங்களின் கண்திருஷ்டியை விரட்டுவதே. கண்திருஷ்டி போடுவதை பற்றி பழைய பதிவுகளில் எழுதிய ஞாபகம் இருக்கிறது அதனை தேடிப்படித்து பாருங்கள். ஒவ்வொருவரும் கண்டிப்பாக கண்திருஷ்டியை போக்க உள்ள வழியை கடைபிடியுங்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: