Followers

Thursday, December 4, 2014

பாவம்


ணக்கம் ண்பர்களே!
                     பாவங்களில் பெரிய பாவம் பெண்களுக்கு இழைக்கப்படும் பாவம் என்று அனைவரும் சொல்லுவார்கள். இதில் பொதுவாக அனைவரும் செய்யும் ஒரு பாவத்தைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு ஆண் மகனுக்கு திருமணம் செய்யும்பொழுது அவருக்கு பெண் பார்க்கிறார்கள். அப்படி பெண் பார்க்கும்பொழுது முதல் தடவையாக நீங்கள் பார்க்கும் பெண்ணை முதலாவதாகவே தேர்வு செய்துவிடுவது நல்லது.

முதல் தடவை பார்க்கும்பொழுது அந்த பெண்ணின் மனதில் இவர் தான் என் கணவராக வரபோகின்றார் என்ற ஒரு மனநிலை ஏற்பட்டுவிடும். அந்த பெண்ணை நீங்கள் பெண் பார்த்துவிட்டு வந்தபிறகு அந்த பெண் வேண்டாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் அந்த பெண்ணின் மனது சங்கடப்படும். இது ஒரு பாவம் என்று அந்த காலத்தில் சொல்லியுள்ளார்கள்.

இன்றைய காலத்திலும் கிராமபுறங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த பாவத்தை தவிர்க்க கிராமத்தில் பெண்ணின் போட்டோவை முதலில் பார்த்தப்பிறகு அதன் பின்பு நேரில் சந்திக்க சொல்லுகிறார்கள். இதனை நீங்களும் பின்பற்றலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: