Followers

Sunday, December 14, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      அம்மனின் பூஜை படங்களை பார்த்துவிட்டு இரண்டு நண்பர்களே உடனே எனக்கு போன் செய்து நன்றாக உள்ளது என்று சொன்னார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு அதன் வழியாக உங்களுக்கு ஒரு செய்தியை சொல்லலாம் என்று பதிவை தருகிறேன்.

அம்மன் பூஜையை மிக ஆவலுடன் அதே நேரத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு செய்யவேன். இது அனைத்தும் எனது குருநாதர் வழியாக வந்த விசயம் இது. அவர் சொல்லுவார் நீ எந்தளவுக்கு கடவுள் மேல் ஈடுபாடு காட்டுகிறாய் என்பது நீ செய்யும் பூஜையில் தெரியும் என்பார்.

என் மனதால் செய்யும் பூஜை இதனை விட மிகப் பிரமாண்டாதாக தான் இருக்கும். பணம் செலவு செய்து செய்வதால் வரும் பணத்திற்க்கு தகுந்தவாறு பூஜையை செய்கிறேன்.

நாம் நிறைய செயலை செய்யவேண்டும் என்று நினைக்கும்பொழுது நாம் செய்யும் பூஜையின் அளவும் மிக பிரமாண்டமாய் அமையவேண்டும். பிரமாண்டம் பிரமாண்டமானதை நமக்கு தரும்.

ஒவ்வொரு பூஜை நீங்கள் செய்யும்பொழுதும் அதிக ஈடுபாடு காட்டுங்கள். அந்த ஈடுபாடு மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: