Followers

Friday, September 27, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 41


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவில் கேது புத்தியைப்பற்றி பார்க்கலாம். ராகு தாசவில் கேது புத்தியின் காலம் 1 வருஷம் 18 நாட்கள் ஆகும். 

இரண்டு பேரும் அண்ணன் தம்பி போன்றவர்கள். அவர்களின் செயல்பாடு இப்பொழுது உள்ள சகோதர்களின் சண்டைபோல் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டு ஜாதகருக்கு அதிகமான கெடுதலை வாரிவழங்குவார்கள். கெடுதலை மட்டும் ஏன் தருகிறார்கள் நல்லது தரமாட்டார்களாக என்று கேட்க தோன்றும். இதோ உங்களுக்காக.

நன்மை என்று பார்த்தால் கேது நன்றாக இருக்கும் பட்சத்தில் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் தனவரவு கிடைக்கும். ஏழில் இருக்கும்பொழுது திருமணமும் நடத்திக்கொடுப்பார். 

எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது திருமணத்தில் பிரச்சினையை தருவார். வாகன விபத்தையும் ஏற்படுத்தி தருவார். உங்களுக்கு வாகனங்கள் இருந்தால் அதாவது நாற்சக்கர வாகனங்களாக இருந்தால் விபத்து வரும். மனதில் சொல்லமுடியாத கவலை தோன்றும்.

உங்களின் வீட்டில் பாட்டி இருந்தால் அந்த பாட்டிக்கு கண்டம் வரும். இப்பொழுது எல்லாம் பாட்டிகளை எல்லாம் யார் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களை தனியாக வாழவைத்துவிடுகிறார்கள். சோதிடர்களின் வேலை சொல்ல வந்ததை சொல்லிவிடவேண்டும். பாட்டி இருந்தால் அவருக்கு கெடுதல் தரும் என்று சொல்லிவிடுங்கள்.

என்ன என்று தெரியவில்லை இந்த பதிவை காலையில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். கேது பகவான் கொஞ்சம் சோதனை செய்துவிட்டார். வெளியில் சென்று வந்தேன். அம்மனை நினைத்து பதிவை எழுத ஆரம்பித்தவுடன் எழுதிவிட்டேன்.

பரிகாரம்

கேது பகவானுக்கு உரிய பரிகாரத்தை செய்யுங்கள். இந்த புத்தியின் பிடியில் இருந்து காத்துக்கொள்ள விநாயகர் மற்றும் நாகதேவதைகளை வணங்கிவாருங்கள். சாமியார்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Paddy said...


Hello Sir, Thanks for your post. You have posted the details about the phase I am going through.

For me Rahu Dasa and Kethu Bhukthi is running now. Started on 10th April 2013 goes until 28th April 2014.Before Ketu Bhukthi started, by February 2014 problems started.

My star is Pooradam, Rasi is Dhanusu.

As of now Ketu is in 5th house (Aries) and Rahu is in 11th house (Libra) along with Saturn.

Will be completing my 11th year of Rahu Dasa by 11th October 2013. Till January 2013 some how I survivied, in the last 8 months it is very tough, almost in the point of breaking down.


Advise any pariharams. Let me know by when I will get back to job?
Thanks,
Padmanabhan

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பரிகாரம் பதிலேயே கொடுத்துள்ளேன் பாருங்கள்.