Followers

Wednesday, December 17, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதில் உங்களின் ஜாதகத்தை வைத்தும் பார்த்துக்கொண்டு வருகிறோம். நமது ஆட்கள் அனைத்தையும் கண்டுபிடித்தாலும் இப்பொழுது உள்ள ஆட்கள் அதனை முழுமையாக செய்வதில்லை.

பழங்காலத்தில் உள்ள மக்கள் அனைத்தையும் கண்டுபிடித்து வைத்தார்கள் ஆனால் அதனை நாம் சோம்பேறிகளாக இருந்ததால் அதனை முழுமையாக இன்று பயன்படுத்தவில்லை. இதனை வெளிநாட்டினர் அறிந்துக்கொண்டு அதனை பயன்படுத்தி நல்ல முறையில் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இன்றைக்கும் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் சென்றால் முழுமையான ஒரு அமைதி கிடைக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் இருந்தாலும் உங்களுக்கு சக்தி குறையாமல் இருப்பீர்கள். அந்தளவுக்கு பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் தன்மையில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் அவை. இன்றைக்கு நாம் கட்டும் கட்டிடங்கள் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் தன்மையில் இல்லை என்பது தான் உண்மை. 

நாம் ஒரு கட்டிடம் கட்டினால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அதனை விட்டுவிட்டு ஒடிவிடுவோம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கு கட்டிடம் கட்டும்பொழுது நமக்கு சுதந்திரம் கிடைத்தப்பொழுது அவர்கள் உடனே கட்டிடத்தை போட்டுவிட்டு செல்லவில்லை. அவர்கள் கட்டிடத்தை முடித்துவிட்டு அதன் பிறகு தான் வெளிநாட்டிற்க்கு சென்றனர். தொழிலின் மீது இருந்த பக்தி. அந்த கட்டிடத்திற்க்கு கொடுத்த மரியாதை.

உங்களுக்கே சந்தேகம் இருந்தால் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நீங்கள் சென்று பார்த்துவிட்டு அதன் பிறகு வந்த சொல்லுங்கள். இன்றைக்கு குளிர் சாதனவசதி எல்லாம் செய்து கட்டிடங்கள் கட்டினால் உங்களுக்கு சோர்வு ஏற்படும் ஆனால் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் இருந்தால் எவ்வளவு நேரம் இருந்தாலும் சோர்வு இல்லாமல் இருக்கலாம். இது ஒரு உதாரணத்திற்க்கு உங்களுக்கு சொன்னேன். விரிவாக பல உதாரணங்களை உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு