Followers

Saturday, December 27, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      மதுரையில் இருந்து இந்த பதிவை தருகிறேன். வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். வாஸ்துவிலும் ஈசானிய மூலைக்கு அதிகம் முக்கியதுவம் கொடுக்கிறார்கள். ஈசானிய மூலையின் வழியாக வீட்டிற்க்கு இறைஅருள் கிடைக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஈசானிய மூலை மிகவும் நல்லமுறையில் இருப்பதுபோல் அமைத்துக்கொள்வது நல்லது. சுத்தமாக இருக்கவேண்டும். பொதுவாக வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று பல பதிவுகளில் நான் சொல்லியுள்ளேன். அதேப்போல் நீங்கள் ஈசானி மூலையை நல்ல முறையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஈசானிய மூலை நன்றாக உங்களின் வீட்டிற்க்கு அமைந்துவிட்டால் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்லது செய்துவிடும். ஈசானிய மூலையின் வழியாக தான் ஈசன் அருள் வீட்டிற்க்கு கிடைக்கிறது. 

உங்களின் ஜாதகத்தின் வழியாக உங்களுக்கு நல்லது நடக்கிற காலம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் உங்களின் வீட்டின் ஈசானிய மூலையும் நன்றாக இருந்தால் மட்டுமே முழுமையான பயனை அடையமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Naan ninaitha visayathaye padhivaaga pottuvitteerkale