Followers

Sunday, March 16, 2014

ஆன்மீக அனுபவங்கள் 158

 
வணக்கம் நண்பர்களே!
                    ஆத்மாவை பற்றி எழுதவேண்டும் என்று திடீர் நினைப்பு வந்தது உடனே ஆன்மீக அனுபவங்களில் அதனைப்பற்றி ஒரு சில தகவல்களை தந்துவிடலாம் என்று ஆரம்பித்தேன்.

இந்த உலகத்தில் மிகவும் சக்தி படைத்தது இந்த உலகேயே ஆக்கவும் அழிக்கவும் கூடியது எது என்றால் பல கருத்துக்களை நீங்கள் சொல்லுவீர்கள். ஆனால் நான் சொல்லுவேன் ஒருவனின் ஆத்மா மட்டுமே. உலகத்தில் உள்ள மனித ஆத்மாக்களால் தான் நவீன கண்டுபிடிப்புகள் எல்லாம் வந்திருக்கிறது. 
 
அந்த ஆத்மாவின் முயற்சியால் தான் அனைத்தும் வருகிறது. ஒரு ஆத்மா தனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்க்கு ஏற்றார்போல் எடுத்துக்கொள்ள நினைக்கிறது. ஆத்மா நினைத்த உடனேயே நிறைவேற்றிக்கொள்ளமுடியாது அதற்கு என்று பல வேலைகளை செய்து தான் நிறைவேற்றிக்கொள்கிறது. இந்த ஜென்மத்தில் இல்லை என்றால் அடுத்த ஜென்மத்திலாவது அடைந்தே தீரும்.
 
நல்ல பயிற்சி பெற்ற ஆத்மா உடனே நினைத்ததை பெற்றுவிடும். பயிற்சி இல்லாத ஆத்மாக்கள் காலகாலமாய் போராடி நிறைவேற்றிக்கொள்ளும். ஆத்மா அது நினைத்ததை அடைந்தால் தான் அதற்கு மோட்சம் என்பதே கிடைக்கும்.
 
உலகில் அணுகுண்டுகள் எல்லாம் வைத்திருக்கிறார் அதனை உபயோகித்தால் அது இந்த உலகத்தையே அழித்துவிடும் நீங்கள் ஆத்மா பெரியது அது நினைத்தால் எப்படி அழிக்க முடியும் என்று கேட்கலாம். அந்த அணுகுண்டை கண்டுபிடித்தே ஒரு ஆத்மா தானே. ஒரு ஆத்மா அழிவு வேலைக்கு வேண்டும் என்று கண்டுபிடித்து இருக்கிறது. ஒரு ஆத்மா நல்ல வேலைக்கு வேண்டும் என்று கண்டுபிடிக்கும். ஆகா மொத்தம் ஆத்மாவின் திறமையால் தான் உருவாக்கப்படுகிறதே தவிர இயற்கையாகவே அது வரவில்லை. 
 
ஆத்மா தான் இந்த உலகத்தில் உள்ள மாற்றங்களை எல்லாம் கொண்டுவருகிறது. அதுபோல் இந்த உலகை அழிக்கவும் மற்றும் காக்கவும் அது தான் செய்கிறது. நல்ல சிந்தித்து பார்த்தால் இந்த தகவல் உங்களுக்கு புரியும்.
 
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
தங்களின் அயாராத உழைப்பைக்கு நன்றி