Followers

Wednesday, March 19, 2014

சித்தர்கள்


 வணக்கம் நண்பர்களே !
                    சித்தர்களைப்பற்றி கேள்வி கேட்டுருந்தேன். இதுவரை யாரும் பதில் தரவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வேலை சித்தர்களைப்பற்றி தொடர் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

மரணத்தைப்பற்றி ஒரு மனிதனின் கடைசி தேடுதல் ஏன் ஆரம்பகட்ட தேடுதலில் தான் ஆன்மீக பக்கம் வருகிறார்கள். மரணத்தை வைத்து வரும் ஆன்மீகம் எப்பொழுது தோற்றுபோகாது விடையை கண்டுபிடித்துவிடும். மரணத்தை வெல்லவேண்டும் என்று நினைத்து தான் சித்தர்களும் ஆன்மீகபாதைக்கு வந்தார்கள்.

ஒரு ஆன்மீகவாதியின் கடைசி இலக்கு நாம் ஆத்மா மற்றும் உடலால் உருவாக்கப்பட்டு இருக்கிறோம். இந்த உடல் அழியக்கூடியது ஆனால் ஆத்மா அழிவதில்லை என்று பாதை வகுத்து இருந்த நேரத்தில் தான் சித்தர்கள் உடலும் அழியாமல் ஆத்மாவும் அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கண்டுபிடித்து வந்தனர். அது தான் சித்தர்களின் ஆன்மீகவழி.

சித்தர்கள் தன் உடலை அழியவிடகூடாது என்று எண்ணினார்கள். உடல் இருந்தால் அது அழியும் தன்மையில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது. அப்படி இருந்தால் அந்த உடலை எப்படி காப்பாற்றுவது என்று நினைத்து அதற்கும் வழியை கண்டுபிடித்தார்கள். அது தான் உடலை காக்க மூலிகையை வைத்து பாதுகாக்கமுடியும் என்று எண்ணி அதற்கு என்ன என்ன மூலிகையை பயன்படுத்தவேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.

சித்தர்களின் மூலிகைகளைப்பற்றி தானே இப்பொழுது இருக்கும் அனைத்து தளங்களிலும் வருகின்றது. அதனை நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். நான் எழுதினால் ஜாதககதம்பம் பக்கம் வரமாட்டீர்கள். 

அவர்களின் உடல் மூலிகைகளால் அழியாமல் பாதுகாத்தார்களா ? உண்மையில் அவர்களின் உடல் அழியாமல் இருக்கின்றதா என்பதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: