Followers

Thursday, March 6, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்றைய பதிவை படித்துவிட்டு ஒரு சில நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு எப்படி சித்தர்கள் சிவனை தானே வணங்கி இருப்பார்கள் நீங்கள் எப்படி அம்மன் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள்.

சித்தர்கள் சிவனை அடைந்தாலும் அவர்கள் வழிப்பட்டது ஒரு அம்மனை தான் என்பதை நீங்கள் படிக்கும் சித்தர்களின் புத்தகங்களில் இருக்கின்றன. அம்மன் இல்லாமல் ஒரு மனிதன் தியானம் கூட செய்யமுடியாது. சித்தர்கள் தன்னோடு எப்பொழுதும் அம்மனை தான் வைத்திருப்பார்கள். அந்த காரணத்தால் தான் அம்மனை வணங்குங்கள் என்று சொல்லுகிறேன்.

அம்மன் மட்டும் இல்லை எந்த ஒரு ஆன்மீகவாதியாலும் முழுமை மட்டும் பெறவே முடியாது. அம்மன் வழிபாடு செய்வார்கள் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

தினமும் எனக்கு எத்தனையோ பாேன்கால்கள் வருகிறது சார் மனது ஒரு நிலைப்பட மாட்டேன்கிறது அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் தீர்வு எப்படிப்பட்ட தியானம் செய்தாலும் அம்மன் துணை இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே மனது ஒரு நிலைப்படும்.

ஆன்மீகவாதிகள் வெளியில் ஒன்றை சொல்லுவார்கள். உள்ளே அம்மன் வைத்து பூஜை செய்துக்கொண்டு இருப்பார்கள். ஏன் அவர்கள் அம்மனை பூஜை செய்யவேண்டும் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். அதனால் ஒரு அம்மனை தன்வசம் வைத்திருக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: