Followers

Wednesday, March 19, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் ஒன்றை சொல்லுகிறேன். நான் இரவில் படுத்து தூங்கினாலும் எனது ஆத்மா தூங்குவது என்பது கிடையாது. அதுவாகவே பல வேலைகளை செய்கிறது. என்னை மீறி பல பேரை காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றது.

இப்பொழுது அதிகமாக பல பைத்தியங்களை தேடிபிடித்து அதனை குணப்படுத்தும் வேலையை தான் செய்துக்கொண்டு இருக்கின்றது. சில சமயங்களில் இதனைப்பற்றி எனக்கு தெரிந்தாலும் தன்னை மீறி செய்யும்பொழுது அதனைப்பற்றி நான் எதுவும் நினைப்பதில்லை.

ஒரு சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நம்மால் நல்லது நடைபெறுகிறதே என்று நான் கண்டுக்கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவும் இப்படி பல வேலைகளை செய்துக்கொண்டு தான் இருக்கின்றது ஆனால் இதனைப்பற்றி தெரிவதற்க்கு உங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. அது யாருடைய சக்தியால் இப்படி செய்கிறது என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக செய்யும்.

ஒரு சிலருக்கு இதனைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாலும் வெளியில் சொல்லுவதற்க்கு வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லுவதில்லை. கம்யூட்டர் உலகத்தில் இது எல்லாம் கதை என்று சொல்லுவார்கள் என்று இருந்துவிடுவார்கள். உங்களுக்கும் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.


கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதி நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளலாம். 21, 22 மற்றும் 23-03-2014 தேதியில்  என்னை சந்திக்கலாம்.  உடனே என்னை தொடர்புக்கொண்டுவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: