Followers

Monday, March 17, 2014

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு


ணக்கம் ண்பர்களே!
                    காயத்ரி மந்திரம் செய்பவர்களின் கவனம் முழுவதும் அந்த மந்திரத்தில் மட்டும் இருக்கவேண்டும். மந்திரம் சொல்ல சொல்ல உங்களின் மனம் பக்குவப்பட்டுவிடும். அதன் பிறகு மந்திரம் தேவையில்லை. உங்களின் மனத்தை வைத்து அனைத்து காரியத்தையும் சாதித்துக்கொள்ளமுடியும்.

மனம் இருந்தால் மந்திரம் தேவையில்லை. மனத்தை பக்குவப்படுத்தவேண்டும். எந்த நேரமும் கவலையோடு இருக்ககூடாது. உங்களின் மனம் மகிழ்ச்சியில் இருந்தால் மட்டுமே மந்திரம் வேலை செய்யும். கவலையோடு இருந்தால் மந்திரம் வேலை செய்யாது.

உங்களின் மனதிற்க்கு எது பிடிக்கிறதோ அதனை செய்யுங்கள். ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். மேலும் உங்களுக்கு மனத்திற்க்கு பிடிக்கிறதை செய்யவேண்டும். மகிழ்ச்சி தரக்கூடிய விசயத்தை பேசவேண்டும் மற்றும் செய்யவேண்டும்.

உங்களின் மனம் பக்குவப்பட்டு விட்டால் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களால் உங்களின் மந்திரத்தை வைத்து வேலை செய்யமுடியும். உங்களின் மனம் பக்குவப்படவில்லை என்றால் வேலை செய்யமுடியாது. நானும் உங்களின் மனது போல் மனதை அலையவிட்டுக்கொண்டு தான் இருப்பேன். எனக்கு வேலை என்று வந்துவிட்டால் அதில் மட்டும் தான் மனதை வைப்பேன். காரியம் வெற்றி பெற்றுவிடும்.

நீங்கள் மந்திரம் செய்யும்பொழுது மனதை அதில் மட்டும் வையுங்கள் வேறு இடத்திற்க்கு கொண்டு செல்லகூடாது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் போக போக அனைத்தும் சரிசெய்துக்கொள்ள வேண்டும். மனதை ஒழுங்குப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: