Followers

Thursday, March 13, 2014

மறுபிறவி பகுதி 7



வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தில் ஒரு ராசியில் ஒன்றும் இல்லை என்றால் அந்த இடத்திற்க்கு வலு குறைவு என்றும், கிரகங்கள் இருக்கும் இடம் சக்தி மிகுந்தது என்றும் சொல்லியுள்ளார்கள். அந்த வகையில் நான் முதல் தகவலாக தருவது லக்கினத்திற்க்கு பனிரெண்டாவது வீட்டை வைத்து மட்டும் வைத்து உங்களுக்கு மறுபிறவியைப்பற்றி சொல்லபோகிறேன். வீட்டை மட்டும் வைத்து முதலில் சொல்லிவி்ட்டு பிறகு கிரகங்கள் அமர்ந்தால் எப்படி பலனை தரும் என்பதையும் நாம் பார்க்கபோகிறோம்.

மறுபிறவியைப்பற்றி ஒரு சிலர் லக்கினத்திற்க்கு இரண்டாவது இடத்தில் தான் அடுத்த பிறப்பு எடுக்கும் என்று சொல்லுவார்கள். லக்கினத்திற்க்கு இரண்டாவது இடத்தை வைத்து நாம் உயிர் போகுவதை மட்டுமே கணிக்கலாம். நாம் போய் சேரும் இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கவும் செய்யும். பனிரெண்டாவது வீடு பல விசயங்களை காட்டினாலும் நாம் ஒவ்வொருவரும் விரையம் மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

பனிரெண்டாவது வீடு என்பது லக்கினத்திற்க்கு பனிரெண்டாவது இடம் லக்கினம் அழியும் இடம். உடல் அழியும் இடம். உடலும் மற்றும் ஆத்மாவும் போகும் இடம் போகும் இடத்தில் ஆரம்பிக்க செய்யும்.

எங்கு போகின்றதோ அந்த இடத்தில் இருந்து தொடக்கம் இருக்கும். ஒரு விதத்தில் மோட்சம் என்று வந்துவிட்டால் அதன் பிறகு பிறப்பு எடுக்காது அல்லவா. அந்த மோட்சத்தை காட்டும் இடமும் அந்த இடம் என்பதால் ஒரு ஆத்மா மற்றும் உடல் என்ன நிலை ஆகபோகின்றது என்று காட்டக்கூடிய இடம் பனிரெண்டாவது வீடு.

எனது சொந்த அனுபவத்தில் இதனை எழுதுகிறேன் நீங்கள் சென்று வேறு எங்கும் இதனை தேடவேண்டாம். எனது அனுபவம் மற்றும் அம்மனின் சக்தியை வைத்து இதனை எழுதுகிறேன். 

இனி ஒவ்வொரு லக்கினமாக இதனைப்பற்றி பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: