Followers

Friday, March 28, 2014

அம்மன் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    பொதுவாக என்னிடம் ஏதாவது பிரச்சினை வைத்தால் நான் விலகி செல்வது வழக்கம். நான் எங்கு சென்று வம்பு செய்தாலும் அம்மனை எல்லாம் ஒருபொழுதும் தவறான வழியில் பயன்படுத்துவது கிடையாது. ஒரு மாத காலம் அம்மனை எந்த வேலையும் இல்லாமல் வைத்திருந்தேன். பல பேர்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.

தொழில் செய்பவர்களுக்கு என்று செய்து வந்தது கூட நிறுத்தி இருந்தேன். பல தொழில் அதிபர்கள் சிக்கலில் சிக்கி விட்டார்கள். அவர்கள் என்னிடம் போன் செய்து என்ன சார் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

நான் யாருக்கும் எதிராக செய்வதில்லை. அம்மனை வைத்து நான் செய்துக்கொண்டிருக்கும் நல்ல விசயங்கள் அவர்களை விட்டு வெளியில் வந்தவுடன் அவர்களுக்கு தோல்வி அதுவாகவே ஏற்பட்டுவிடுகிறது. உங்களின் தொழில் நன்றாக இருக்க நான் இங்கு இருந்து செய்கின்ற வேலை தடைப்பட்டவுடன் உங்களின் தொழில் தோல்வியை சந்திக்கிறது.

உங்களின் தொழில் வெற்றி அடைந்தர்க்கு காரணம் அம்மனின் சக்தி மட்டுமே. அம்மன் சக்தி இல்லை என்றால் தொழில் பிரச்சினையை சந்திக்கிறது. அம்மனின் சக்தி வேண்டும் என்பவர்கள் தொடர்புக்கொள்ளலாம். பணம் இல்லாமல் சக்தி வராது. எனது வளர்ச்சி மற்றும் பொதுசேவைக்கு பணம் தேவைப்படுவதால் இப்படி மாற்றிவிட்டேன்.

என்னால் முடிந்தளவு சேவை செய்துவிட்டேன் இனி சேவை வேறு மாதிரி செய்யவேண்டும் என்பதால் திடீர் ஏற்பாடு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. பல நண்பர்கள் இதனால் பாதிப்படைந்திருப்பார்கள் என்ன செய்வது சம்பாதிப்பது அனைத்தும் வீட்டிற்க்கே எடுத்து செல்லவேண்டும் என்றால் உட்கார்ந்து வேலை செய்வனின் நிலைமை மோசமாகிவிடும்.

பணம் என்றவுடன் எனக்கு வாடிக்கையாளர்கள் இப்பொழுது அதிகரித்து உள்ளனர். செய்துவிட்டு வாங்கிக்கொள்கிறேன் என்றவுடன் அது வேறு மாதிரி நினைக்க தோன்றியது. நாங்கள் கொடுக்கும் பணத்திற்க்கு நீங்கள் செய்தால் போதும் என்று சொல்லுகிறார்கள். நானும் அதுபோல் செய்துக்கொண்டு உள்ளேன்.

நாங்கள் இதனை கற்கும்பொழுதே குருவின் கட்டளை வரும் நபர்களிடம் பணத்தை வாங்கினால் மட்டுமே அவர்களின் கர்மாவை குறைக்கமுடியும். அப்படி குறைக்கும்பொழுது மட்டுமே அவர்களின் வேலை நடைபெறும் என்பார். இது உண்மையான ஒன்று. கர்மாவை குறைக்க ஒரு வழியை ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு செய்தால் வேலை உடனடியாக நடந்துவிடும்.

ஒரு வேலையை இலவசமாக செய்துவிட்டு அவர்களிடம் இருந்து அம்மனை வைத்து பணத்தை வாங்கலாம் ஆனால் அது தவறான வழியில் சென்றுவிடும் என்பதால் அதனை செய்வதில்லை. அம்மனின் கோபத்திற்க்கு ஆளாகிவிட்டால் மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பிவருவது கடினம் என்பதால் செய்வதில்லை. காரியம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பணத்தை கொடுத்து சாதித்துக்கொள்ளலாம்.

நமது ஜாதககதம்பத்தில் புதியதாக வரும் நபர்கள் கவலைப்படுகின்றனர். நான் என்ன செய்வது கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று இருந்துவிடவேண்டியது தான் என்ன செய்வது மனிதனின் குணங்கள் அப்படி இருக்கின்றன.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: