Followers

Monday, March 3, 2014

அம்மனின் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    மாதந்தோறும் நடைபெறும் அம்மனின் பூஜை இந்த மாதத்தில் 10 ஆம் தேதிக்கு மேல் ஒரு நாளில் நடைபெறும். அந்த நாளை பிறகு பதிவில் தெரியப்படுத்துகிறேன். இந்த மாதம் உங்களின் வேண்டுதல் நடைபெற்று அதற்கு பூஜையில் பங்கு பெறவேண்டும் என்றால் உங்களின் பங்களிப்பை செலுத்தலாம்.

வேண்டுதல் நடைபெற்றவர்கள் மட்டும் பணத்தை போடுங்கள். ஏன் என்றால் சும்மா பணத்தை போட்டால் அந்த பணம் பூஜைக்கு என்று சென்றாலும் மனம் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. வேண்டுதல் நடைபெறாமல் போடுகின்றனரே என்று நினைக்க தோன்றுகிறது.

அம்மனின் பூஜை என்று சொன்னாலே ஏகாப்பட்ட பணம் வருகிறது. அனைத்து பணத்தையும் ஒரே பூஜையில் நான் செலவு செய்யவில்லை. பணத்தை வைத்துக்கொண்டு பிறகு வரும் பூஜையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு நபர் அனுப்பும் பணம் போதுமானதாகவே இருக்கின்றது. அனைத்தும் பணமும் அம்மனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

புதிதாக வருபவர்களும் அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள். அம்மன் நடத்திக்கொடுக்கும். உங்களுக்கு பிரச்சினை என்றால் உடனே என்னிடம் வராமல் அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள். அம்மன் செய்து தரவில்லை என்றால் என்னிடம் வரலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: