Followers

Thursday, March 27, 2014

விழிப்புணர்வு


வணக்கம் நண்பர்களே!
                                    நாம் என்ன தான் விழிப்புணர்வோடு வெளியில் சென்று தேடினாலும் அதற்கு முன்பே பல பேர் அதில் ஈடுபட்டது தெரியவரும். அப்படி ஒன்றை நேற்று எனது நண்பர் ஒருவர் பகிர்ந்துக்கொண்டதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன்.

உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அனைத்து தோஷமும் நீங்குவதற்க்கு அனாதை பிணத்தை அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன் அல்லவா. அதனைப்படித்துவிட்டு நமது நண்பர் ஒருவர் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஏதாே நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்று தேடி பார்த்து இருக்கிறார். 

அவர் தேடியது மின்மயானங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட இடத்தில் போய் விசாரிக்கும்பொழுது தான் தெரிந்து இருக்கிறது. பல பேர் அதற்கு முன்பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

நாம் ஒரு விசயத்தை சொல்லுவதற்க்கு முன்பு பல பணக்காரர்களுக்கு அந்த செய்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆன்மீகவாதிகள் சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் தயார் நிலையில் இருந்துவிடுகிறார்கள். 

அனாதை பிணங்கள் என்று வரும்பொழுது அதற்கு காவல்துறை உதவி தேவைப்படும் அதனை செய்துவிட்டு தான் நீங்கள் காரியம் செய்யப்படவேண்டும்.  அதனை முறையாக பெற்று நீங்கள் செய்யுங்கள். தேடினால் கண்டிப்பாக எப்படியாவது உங்களுக்கு வாய்ப்பு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: