Followers

Monday, March 10, 2014

தோஷம் நீங்கி செல்வ வளம் பெற



வணக்கம் நண்பர்களே !
                    நாம் நமது கிரகங்களின் நல்ல பலனை வழங்கும் நேரத்தில் நல்ல வாய்ப்பை பெற்றாலும் ஒரு சிலர் நல்ல பலனை தன்னுடைய சுயமுயற்சியால் பெறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நல்ல விசயத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

நாம் வாழும் வாழ்க்கையில் அதிக பிரச்சினைக்கு காரணம் கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த தோஷத்தை போக்க நாம் படாதபாடுபடுகிறோம். கோவில் குளங்கள் என்று அலைந்துக்கொண்டு இருந்தாலும் நமக்கு ஏற்பட்ட தோஷங்கள் குறையமாட்டேன்கிறது.

கிரகங்களின் தோஷம் குறைந்தால் தானே நாம் முன்னேற்றம் அடையலாம். அதனை போக்க ஒரு வழியை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். இதனைப்பற்றி ஏற்கனவே நான் சொல்லிருந்தாலும் புதிதாக வரும் நபர்களுக்கு உதவுமே என்று தான் சொல்லுகிறேன்.

அனாதையாக இறக்கும் நபர்களின் உடலை நீங்கள் பெற்று அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்து உங்களால் அந்த உடல் எரியுட்டபடுவது அல்லது புதைக்கப்பட்டால் உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷமும் நீங்கும்.

அனாதை உடலுக்கு என்று நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப்பெரிய யாகம் செய்து கிடைக்கும் பலனை நீங்கள் பெறமுடியும். பல பணக்காரர்கள் இந்த உதவியை செய்துக்கொண்டே இருக்கின்றனர். இதனை படித்துவிட்டு நீங்கள் ஒரு அனாதைக்காகவது செய்து பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: