Followers

Tuesday, March 18, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு என்ன சார் பதிவுகள் குறைவாக வருகிறது என்று கேட்டனர். தவிர்க்கமுடியாத காரணத்தால் பதிவுகள் குறைவாக தந்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதிக பதிவுகள் தருகின்றேன். ஒரு வாரம் ஆகும். தினமும் ஒரு பதிவை எப்படியாவது தந்துவிடுகிறேன்.   

கட்டணம் என்று வைத்தவுடன் பல பேர்கள் இப்பொழுது கஷ்டப்படுகின்றார்கள். நாங்கள் அவர்கள் போல் இருக்கமாட்டோம் என்று சொல்லுகின்றனர். இதுவரை என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டு வந்தேன். இனி மேல் இதனை செய்தேன் என்றால் எனக்கு கொடுத்தவர்களே என்னிடம் இருந்து எடுத்துவிடுவார்கள்.

ஒரு உதவி வருகின்றது என்றால் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் இவ்வளவு தான் பணம் வேண்டும் என்று நான் எதிர்பார்த்தது கிடையாது. உங்களால் முடிந்த பணத்தை தாருங்கள் என்று சொல்லிருந்தேன். அது கூட தரமுடியவில்லை. சரி இவர்களிடம் கேட்டு வாங்குவது முடியாத காரியம். அம்மனை வைத்து திருப்பி அடித்து தான் வாங்க வேண்டும். அந்த பழக்கம் கிடையாது என்பதால் விட்டுவிட்டேன். இனிமேல் பணத்தை பெற்ற பிறகு தான் வேலையை தொடங்குவேன்.

எனக்கு மேல் பெரிய தலைகள் இருக்கின்றார் அவர்களின் மீறி என்னால் உங்களுக்கு செய்யமுடியாது. அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.இலவச சோதிடம் வழக்கம்போல் இருக்கும். அதனையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: