Followers

Thursday, March 6, 2014

நாடி



வணக்கம் நண்பர்களே!
                   நாடியைப்பற்றி எழுதி இருந்தேன். அது நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. நாடியைப்பற்றி மேலும் ஒரு சில தகவலை நான் சொல்லவேண்டும் என்பதால் இந்த பதிவு.

நாடி பிடித்து பார்க்கும்பொழுது உள்ள ஒரு சில நுட்பங்களை செய்முறையில் மட்டும் தான் தெரிந்துக்கொள்ளமுடியும். ஒருவருக்கு பித்தநாடி துடிப்பு அதிகமானால் அவரின் உடலை போட்டு முறுக்கி எடுக்கும். ஒரு சிலர் இறக்க நேரிடும் சமயத்தில் படுத்து படுக்கையாக இருந்துக்கொண்டு இருக்கும்பொழுது அவர் படுக்கையில் உருண்டுக்கொண்டே இருப்பார் அல்லவா. அது எல்லாம் பித்த நாடியின் வேலை.

பித்தநாடி அதிகம் வேலை செய்யும்பொழுது நமது முன்னோர்கள் தன் கண்களுக்கு தெரிவார்கள். படுக்கையில் இருக்கும்பொழுது அவன் வருகிறான் இவன் வருகிறான் என்று முன்னோர்களின் பெயரை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.இறந்தவர்களை எல்லாம் காட்டும் ஒரு செயல் பித்த நாடியிடம் இருக்கின்றது.

பொதுவாக ராகு மற்றும் கேதுவின் நட்சத்திரக்காரர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கும். அவர்களின் உடல் ஒரு நிலையில் எப்பொழுதும் இருக்காது. உடலை போட்டு முறுக்கி எடுக்கும். இவர்களுக்கு தெய்வபக்தி மற்றும் முன்னோர்களைப்பற்றி பார்ப்பது எல்லாம் இந்த நாடி அதிகம் வேலை செய்வதால் மட்டுமே.

இவர்களின் உடலும் ஒரு நிலையில் இல்லாமல் முறுக்கிக்கொண்டு இருப்பார்கள். மனதும் ஒரு நிலைப்படாது. இவர்கள் அதிகம் ஆத்மாக்களை சந்திப்பார்கள். ஆத்மாக்களின் உலகத்தோடு இவர்கள் தொடர்பு இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: