Followers

Thursday, March 20, 2014

குரு தசா பலன்கள் பகுதி 94



வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு குரு எட்டாவது வீட்டில் இருந்து குரு தசா நடைபெற்றால் அவருக்கு கண்டிப்பாக முன்னோர்களின் வழியில் உள்ள சொத்துக்கள் கிடைத்துவிடும். அரசாங்கத்தில் சேமிப்பில் உள்ள பணமும் கிடைத்துவிடும். அதே நேரத்தில் கையில் பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

முன்னோர்களின் சொத்துக்கள் கிடைத்தாலும் பெரியோர்கள் சிலர் உங்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் உங்களை திட்டிக்கொண்டு வேலை வாங்குவார்கள். பெரியோர்களுக்கும் உங்களுக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கும்.

மரணத்தை காட்டும் இடத்தில் குரு அமர்ந்து தசா நடைபெறுவதால் உங்களுக்கு அடிக்கடி உடல்நிலையில் பிரச்சினை ஏற்படும். பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே திடீர் என்று மயக்கநிலைக்கு சென்று திரும்புவீர்கள். மரணம் ஏற்படாது ஆனால் நோய்வாய்ப்படும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உடல்நிலையில் நோய் ஏற்படும். நோயால் செலவு அதிகம் ஏற்படும். மருத்துவசெலவு வைக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு வேலை போய்விடும் அல்லது வேலையில் இருந்துக்கொண்டு இருந்தாலும் உங்களுக்கு பெரிய அலுவலகர்களால் உங்களுக்கு பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு பிராமணர் இருந்தார் அவர்க்கு குரு எட்டாவது வீட்டில் இருந்தார். அவருக்கு குரு தசா ஆரம்பித்த நாளில் இருந்து கருமாதிக்கு மட்டும் புரோகிதர் வேலை செய்துக்கொண்டு வருகிறார். வேறு வேலைக்கு செல்வதில்லை. அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். குரு அமையும் வீட்டை பொருத்து பலன்களை தரும்.
 
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: