Followers

Sunday, March 30, 2014

குரு


ணக்கம் ண்பர்களே !
                    குருவைப்பற்றி ஒரு நண்பர் கேள்வி அனுப்பி இருக்கிறார் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக உங்களுக்கும் ஒரு விசயத்தைப்பற்றி தெரியப்படுத்துகிறேன்.

இப்பொழுது உள்ள மக்களுக்கு எல்லாம் கார்ப்ரேட் சாமியார்களை குருவாக ஏற்றுக்கொள்வது மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது அதற்கு காரணம் அவர்கள் விளம்பரம் செய்யும் விதம் அப்படிப்பட்டது அதனை நாம் குறைச்சொல்லகூடாது. குரு என்பவர் உங்களோடு எந்த நேரத்திலும் தொடர்புக்கொள்பவராக இருக்கவேண்டும். பெரிய சாமியாரை போய் குருவாக ஏற்றுக்கொண்டால் அவரை நாம் எந்த நேரத்திலும் தொடர்புக்கொள்ளமுடியுமா?

ஒரு நல்ல குரு என்பவர் ஒரு சிஷ்யனை உருவாக்கமாட்டார். ஒரு நல்ல குருவை தான் உருவாக்குவார். நீங்கள் சொல்லும் குரு எல்லாம் எத்தனை குருவை உருவாக்கியுள்ளார்கள் என்பதை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு கார்ப்பரேட் சாமியாரிடம் சென்றால் உங்களை அடிமையாக்குவார். அது தான் நடைபெறும். கார்ப்பரேட் சாமியார்களின் முதல் வேலை எந்த நேரமும் பேசிக்கொண்டே இருப்பார்கள். மக்களின் மனதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களின் மனது ஏதாவது பேசிக்கொண்டே இருக்கவேண்டும் அல்லது யாராவது பேசிக்கொண்டு இருந்தால் அதனை கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் இதனை நன்றாக புரிந்துக்கொண்டு அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்களும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஒரு நாளும் ஒன்றும் நடைபெறாது.

இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு கார்ப்பரேட் சாமியார்கள் லட்சம் பேர்களுக்கு மேல் தீட்சை அளிக்கிறார்கள். இந்த லட்சத்தில் யாராவது போய் தனியாக நின்று ஒரு ஆசிரமம் அமைத்து அவர்கள் பிறர்க்கு தீட்சை கொடுத்தார்களா என்று ஒரு நாள் நீங்கள் சிந்தித்து பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக இருக்காது. 

ஒரு நாளும் அவர்கள் செய்யமாட்டார்கள். உங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது தான் அவர்களின் வேலை. பொதுவாக நீங்கள் பெரிய சாமியார்களிடம் சென்றால் அவர்களின் ஆசிரமத்தை விட்டு வெளியில் கூட வரமுடியாது. சந்நியாசி தீட்சை வாங்கிவிட்டால் அவர்களின் ஆசிரமம் தான்  உலகம் என்று இருக்கவேண்டியது தான். இந்தியாவில் உள்ள ஆசிரமங்கள் அடிமைகளின் கூடாரமாக விளங்குகிறது.

ஒரு குருவிடம் நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டால் நீங்கள் கொஞ்ச காலத்தில் நீங்களும் குருவாக மாறிவிடுவீர்கள் என்பதை புரிந்துக்கொண்டுவிட்டால் போதும். இந்தியாவில் உள்ள சாமியார்கள் எதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது நன்றாக புரியும்.

ஒரு நல்ல குருவை கண்டுபிடிப்பது எளிது அவரிடம் நீங்கள் சென்று உட்கார்ந்துவிட்டால் உங்களின் மனதில் கேள்வியே எழாது. அப்படியே அமைதி அடைந்துவிடும். அவர் தான் நல்ல குரு.  

இந்தியாவில் எத்தனையோ சாமியார்கள் மிகப்பெரிய அளவில் சக்தி படைத்தவர்களாக இருந்து இருக்கிறார்கள் அவர்கள் இந்த உலகத்தையே இழுத்து இருக்கமுடியும் ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை. கடந்த பத்து வருடங்களாக இருக்கும் சாமியார்களுக்கு மிகப்பெரிய சக்தி எப்படி வந்து இருக்கும். அவர்கள் செய்யாதை இவர்கள் செய்கிறார்கள் என்றால் எல்லாம் மீடியா செய்யும் வேலை. இதனை நீங்கள் புரிந்துக்கொண்டாலே போதும்.

நீங்களே மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள் தான் இதனை நீங்கள் உணரவில்லை இதனை நீங்கள் உணர்ந்தால் போதும். சாமியார்களை எல்லாம் நீங்கள் தேடிபோகவேண்டியதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

CHITRA said...

very good explanation sir. but when we have a confusion, not having a determined mind , what type of prayer will help us