Followers

Saturday, March 22, 2014

சித்தர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    சித்தர்களைப்பற்றி பார்த்தோம் அல்லவா. அதில் உடலை பாதுகாக்க மூலிகைகளை பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா. அப்பொழுது உடல் இந்த பூமியில் இருக்கவேண்டும் அல்லவா. கண்டிப்பாக இந்த பூமியில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கின்றது. அனைவராலும்  அந்த உடலை பார்த்துவிடமுடியாது.

சித்தர்களின் ஜீவசமாதி என்று சொல்லுகிறோம் அந்த இடத்தில் சித்தர்களின் உடல் இருக்கின்றது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் மக்களைப்பற்றி அவர்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. மனிதன் கையில் கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்று அவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஜீவசமாதி என்று சொல்லிவிட்டு ஏதாவது ஒரு சக்தியை வைத்துவிட்டு அவர்களின் உடலை வேறு இடத்தில் மறைத்து வைத்திருப்பார்கள்.

எப்படி நீங்கள் சொல்லுவதை நாங்கள் நம்புவது என்று உங்களின் மனம் கேட்கதோன்றும். ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில் சமாதி வைக்கவேண்டும். ஒரு சித்தர்க்கு இப்பொழுது பல இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது. அப்பொழுது எப்படி ஒரு உடலை பிரித்து பல இடத்தில் வைத்திருப்பாரா என்று நாம் நினைக்கவேண்டாமா. பல இடத்தில் ஜீவசமாதியை வைத்ததின் நோக்கம் மனிதனை குழப்பவேண்டும் அதே நேரத்தில் எங்கு ஜீவசமாதி என்று அழைக்கிறார்களே அங்கு சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் உடல் மறைக்கப்பட்ட இடம் வெளியில் தெரியாமல் இருக்க பல வழிகளை வைத்து அவர்கள் மறைத்து வைத்திருக்கின்றனர். உலகம் முழுவதும் சாட்டிலைட்டில் படம் எடுத்து வைத்திருக்கிறோம் என்று நாம் அறிவியலை கண்டு மெய்சிலிர்க்கலாம். எந்த அறிவியல் கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத படி மறைத்து வைத்து இருக்கின்றனர்.
 
ஒரு இடத்தை அவர்கள் சொல்லிவிட்டு வேறு இடத்தில் அவர்களின் உடலை பாதுகாப்பாக வைத்து இருக்கின்றார்கள். அந்த இடத்தை மனிதன் செல்லமுடியாதபடி அதே நேரத்தில் எந்த கருவியாலும் கண்டுபிடிக்காதபடி மறைத்து வைத்து இருக்கின்றனர். எப்படி நம்புவது என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் ஒரு நல்ல குருவிடம் ஆன்மீகம் படிக்கும்பொழுது அவர்கள் காட்டிக்கொடுப்பார்கள். 

ஆன்மீகவாதிகளால் கண்டுபிடிக்கமுடியும். அதனால் தான் நான் நீங்கள் சித்தர்களை தரிசனம் செய்யவேண்டியதில்லை நல்ல குருவை தேடினால் போதும். குரு அனைத்தையும் உங்களுக்கு காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Kalairajan said...

அய்யா
சரியான குருவை இந்தகாலத்தில் தேர்ந்த்தேடுத்து பாடம் படிப்பது சற்று சிரம்மமான காரியம்