Followers

Thursday, March 6, 2014

மறுபிறவி பகுதி 6



வணக்கம் நண்பர்களே!
                    மறுபிறவி என்று சொன்னவுடன் நமது மக்களுக்கு உடனே வருபவர் கேது பகவான் மட்டும் தான். இவர் ஞானக்காரகன் என்ற காரணத்தால் பனிரெண்டில் அமர்ந்தவுடன் உனக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

கேது அமர்ந்தால் மட்டும் மறுபிறவி கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய வேலை எல்லாம் முடித்துவிட்டேன். இனி இவன் தேவையில்லை என்று நினைத்தால் தான் நீங்கள் மறுபிறவி அடையமாட்டீர்கள்.

முன் ஜென்மத்தில் நிலுவையில் இருக்கும் கணக்குகளையும் சரி செய்யவேண்டும் இந்த ஜென்மத்தில் உள்ள கணக்குகளையும் சரி செய்யும்பொழுது மட்டுமே ஒருவரை வெளியேற்றமுடியும் அப்படி இல்லை அவர் மறுபிறவி என்று மாட்டிக்கொள்வார்.

முன்ஜென்மத்தில் உள்ள கணக்கு வழக்குகளை எல்லாம் குரு கிரகம் வைத்திருக்கிறது அல்லது ஐந்தாவது வீட்டு அதிபதி வைத்திருக்கிறது. இவர்களும் மனசு வைக்கும்பொழுது வெளியில் செல்லமுடியும். வட்டம் பூர்த்தியாகிவிட்டது என்று அனுப்பும்.

ஒரு மனிதன் மனசு வைத்தால் எப்படிப்பட்ட கர்மாவையும் தீர்த்துக்கொண்டு அந்த இறைவனின் வட்டத்தில் பூர்த்தியாக முடியும். அதற்கும் கிரகநிலைகள் தான் ஏற்படுத்துகிறது. அதனைப்பற்றி எல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

கேது பகவான் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து அதனை குரு கிரகம் பார்த்தால் அந்த நபருக்கு மோட்சம் கண்டிப்பாக கிடைக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

இதே போன்று லக்னத்தில் இருந்தால்....