Followers

Saturday, March 29, 2014

ஆன்மீகபயிற்சியின் பொழுது


ணக்கம் ண்பர்களே!
                    என்னை சந்திப்பவர்கள் பெரும்பாலும் நானும் ஆன்மீகவாதியாக மாற வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒரு சில பயிற்சிகளை நாம் செய்ய சொல்லுவேன். இதனை கடைபிடித்தும் வருகிறார்கள். அதில் ஒரு தகவலைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன் அதற்கான பதிவுதான் இது.

ஆன்மீகவாதியாக நாம் முதலில் மாறவேண்டும் என்றால் நாம் ஆன்மீகவாதி என்று பிறர் நம்மை கண்டுபிடிக்கமுடியாதபடி இருக்கவேண்டும். ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் பிறரின் கண்கள் நம்மீது படும்பொழுது அது தடங்கலாக மாறிவிடும். நாம் நினைத்தை அடையமுடியாது. நம்மில் பலர் ஆன்மீகவாதியாக மாறமுடியாதற்க்கு முதல் காரணம் இது மட்டுமே. 

நாம் உடுத்தும் உடையில் இருந்து வைக்கும் திருநீரு கூட பூஜையில் இருந்து வெளியில் வரும்பொழுது மாற்றிவிடவேண்டும். சாதாரணமான ஆளாக இருக்கவேண்டும். நாம் ஒரு உயர்ந்த சக்தியை அடைய முயற்சி செய்கிறோம் அதனால் பிறரின் தவறான மனதின் ஒட்டம் நம்மை தாக்காமல் பார்த்துக்கொள்வது உங்களின் பொறுப்பு.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் ஒரு கோவில் சென்று வந்தவுடன் அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான போட்டோவை முகநூலில் பகிர்ந்துவிடுகிறீர்கள். பார்க்கும் நபர்கள் உங்களை ஆன்மீகவாதியாக நினைக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நாம் நினைத்ததை அடைந்த பிறகு வெளியில் காட்டிக்கொள்ளலாம். நமக்கு தான் ஆன்மீகமே தவிர ஊருக்கு கிடையாது.

ஆன்மீகப்பயிற்சியின் பொழுது நான் அதனை செய்து தருகிறேன் இதனை செய்து தருகிறேன் என்று ஆன்மீகவழியில் ஏமாற்றகூடாது. ஆன்மீகவழியில் சம்பாதிக்ககூடாது. பயிற்சியின் பொழுது இதனை செய்தால் நம்மை நெருங்கி வந்துக்கொண்டிருகிற சக்தி திரும்பிவிடும். ஒருபொழுதும் நாம் சக்தியை பெறமுடியாது என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.

நான் பயிற்சியின் பொழுது மிகவும் கட்டுபாடு உடன் இருந்தேன். மிகவும் எச்சரிக்கையாக அனைத்து விசயத்திலும் இருந்தேன். இதனை தான் குருவும் விரும்புவார்கள். முதலில் உனக்கு கிடைக்கட்டும் அதன் பிறகு அதனை வைத்த எதை வேண்டுமானாலும் செய்துக்கொள் என்பார்.பயிற்சியின் பொழுது நீங்களும் இதனை கடைபிடித்துவந்தால் விரைவில் நீங்கள் அடைந்துவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

O ho ithil ithanai visayam ulladha?

CHITRA said...

why can,t you be our aanmeegaguru? Why searching in other places? and others / how can we select aanmeegaguru ? Because my friend hasv accepted sadguru as aanmeega guru and follwing him, I won,t have a mind to accept him. Reason I don't Know?