Followers

Thursday, August 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 103


வணக்கம் நண்பர்களே!
                     ஒருவருக்கு ஆன்மீகத்தில் சாதனை செய்வதற்க்கு என்று பல காரணிகள் இருந்தாலும் அவர் செய்யும் சேவை மட்டுமே ஆன்மீகத்தில் உயர்த்தும் என்பதை பற்றி சொல்லுவதற்க்கு என்று இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன்.

நான் ஆன்மீகத்தி்ல் ஈடுபடுவதற்க்கு முன்பே எனக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அடுத்தவர்களுக்கு என்னால் பணஉதவி செய்யமுடியாவிட்டாலும் அடுத்தவர்களுக்கு எந்த நோக்கமும் இல்லாமல் உதவி செய்வேன். அந்த உதவி பிறகு என்னை நன்றாக உயர்த்தியது என்றே தான் சொல்லவேண்டும்.

அந்த நேரத்தில் நான் செய்த உதவி எதுவும் எதிர்பார்த்து செய்ததில்லை ஆனால் இன்று செய்யும் உதவி சிறு எதிர்பார்ப்போடு இருக்கிறது அதற்கு காரணம் அன்று செய்த உதவியால் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறோம் இன்னும் உதவி செய்தால் பெரிய அளவில் இருக்கலாம் என்று சிறு நினைப்பு வருகிறது என்று மட்டும் உண்மை.

உங்களுக்கு ஆன்மீகத்தைப்பற்றி தெரியவேண்டும் என்று இந்த ஜாதககதம்பத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இதனை நான் செய்வதால் ஆன்மீகத்தில் எனக்கு நல்ல முன்னேற்றத்தை தருகிறது என்பது தான் உண்மை. அதைவிட எனக்கு ஒரு நல்ல திருப்தி கிடைக்கிறது என்று சொல்லவேண்டும். நாம் எதனை வேண்டுமானாலும் பணத்தை கொடுத்து வாங்கிவிடலாம் ஆனால் ஆன்மீகத்தை மட்டும் வாங்கமுடியாது. இந்த அனுபவத்தை ஒருவர் பெற வேண்டும் என்றால் அவர்கள் பிறர்க்கு செய்யும் தொண்டு மட்டுமே அவரை உயர்த்துமே தவிர வேறு ஏதும் கிடையாது.

எந்த ஒரு காரணத்திலும் நாம் அடுத்தவர்களுக்கு கெடுதலை தந்துவிடகூடாது. இதனை நான் நமது பதிவில் சொல்லியுள்ளேன். இன்று நான் சந்திக்கும் பல நண்பர்கள் சொல்லும் வார்த்தை சார் நான் எந்தவித தவறும் செய்யாமல் சென்றுவிடவேண்டும் என்று தான் நினைக்கிறேன் அதன்படி நடக்கிறேன் என்று என்னிடம் பலபேர்கள் சொல்லும்பொழுது நான் ஏதோ வெற்றி பெற்றுவிட்டாதாக நினைக்க தோன்றுகிறது.

இந்த மரியாதை எனக்கு கிடைப்பதற்க்கு காரணம் நான் செய்த தொண்டுகள் மட்டுமே. என்ன மாதிரி தொண்டு செய்தேன் என்று மட்டும் வெளியில் நான் சொல்லுவதில்லை. எனக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு இது தெரியும். நான் செய்த தொண்டு இன்று எனக்கு எந்த வித தீயகிரகங்களும் தீயபலனை கொடுக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.  என்னுடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களை பார்த்தால் என்னை வெளியுலகத்திற்க்கு தெரிவதற்கே வாய்ப்பே இல்லை என்றே சொல்லவேண்டும் ஆனால் என்னை என்று தெரியவைப்பதற்க்கு காரணம் செய்த தொண்டு மட்டுமே காரணம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: