Followers

Thursday, August 29, 2013

புரளி கிளப்பும் சனி+ராகு


வணக்கம் நண்பர்களே!
                    எப்பொழுதும் ஏழரைச்சனி நடக்கும் நாட்களில் ஏழரைச்சனியின் பாதிப்பில் இருப்பவர்களை அவ்வளவு எளிதில் கொல்லாது என்பது சோதிடவிதி. அதே நேரத்தில் ஏழரைசனியோடு ஒரு பாவக்கிரகம் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரை கொல்லநேரிடும்.

இப்பொழுது கன்னி ராசி துலாம் ராசி மற்றும் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி காலம் என்பதால் இவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பாதுகாப்பாற்ற இடங்களில் தங்குவது தவிர்க்கவேண்டும். உடல்நிலையில் பிரச்சினை வந்தாலும் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

சனியோடு ராகு இருப்பதால் ஏழரைச்சனி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நிழல்கிரகத்தோடு ஒரு கிரகம் சேரும்பொழுது அந்த கிரகத்தின் பாதிப்பு குறையும் என்று சொல்லுவார்கள். இப்பொழுது அப்படி இல்லை இரண்டும் நல்ல பவர்புல்லாக இருக்கின்றது. 

இந்தியாவில் ரூபாயின் வீழ்ச்சி என்று சொல்லுகிறார்கள். இது எல்லாம் ஒரு விதத்தில் ஆளும் அரசு சொல்லும் சூழ்ச்சியாக கூட இருக்கலாம். வெளியில் இருக்கும் பணத்தை உள்ளே கொண்டு வருவதற்க்கு ஒரு தந்திரமாக இருக்கலாம். ஏன் அரசியல் என்று கேட்கவேண்டாம். ராகுவும் சனியும் சேரும் பொழுது இப்படி ஏதாவது ஒரு ரூமரை கிளப்பிவிடுவார்கள். 

இல்லாத ஒன்றை கிளப்பிவிடுவதில் இருவரும் வல்லவர்கள். கண்டிப்பாக சோதிடகண்ணோட்டத்தில் பார்த்தால் இப்படி தான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. ராகு ஒரு திருடன். சனி ஒரு திருடன் இரண்டும் சேர்ந்து இப்படி செய்து திருட்டுவேலையை செய்யலாம்.

எது எப்படியோ. ஏழரை சனி நடப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: