Followers

Tuesday, August 27, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    மாதம் தோறும் வரும் நடைபெறும் அம்மனின் பூஜையில் பலபேர்கள் பங்குக்கொண்டு வருகிறார்கள். ஆவணி மாத பூஜையை நடத்த திட்டமிட்டு உள்ளேன். அதற்கு இதுவரை அம்மனிடம் வேண்டுதல்களை வைத்து நிறைவேறியவர்கள் பங்குபெறலாம்.

இந்த பூஜையை செய்ய பல பேர் போட்டி உள்ளது. பூஜையை விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கலாம் என்று நினைத்துள்ளேன்.  நமது அம்மன் அமைந்திருக்கும் இடத்தில் முதல் முதலாக பல வருடங்களுக்கு முன்பு விநாயகர் சிலையை அப்பொழுது நான் அமைத்தேன். நானும் எனது நண்பர் விமல் என்பவரும் சேர்ந்து வாங்கி அந்த சிலையை நமது அம்மன் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய அரசமரம் இருக்கிறது. அதற்கு கீழ் அமைத்தேன். 

விநாயகர் சதுர்த்தி அன்று பிரபலமாக பூஜை வருடந்தோறும் எனது குடும்பத்தினர் மட்டும் செய்து வருகின்றனர். இன்றைய வருடம் இதே தேதியில் பூஜை வைத்தால் நீங்களும் பங்குக்கொள்ளமுடியும் என்பதால் இன்றைய தேதியை தேர்ந்தெடுக்கலாம் என்று உள்ளேன்.

இப்பொழுது இந்த பூஜையை செய்ய அம்மன் உதவி செய்யும் கம்பெனிகளே தருகின்றன ஆனால் தனி மனிதர்களும் தங்களுக்கு உள்ள பிரச்சினைக்கு தீர்வுக்காக பணம் அனுப்பலாம்.வேண்டுதல் வைத்து அந்த காரியம் வெற்றி அடைந்தால் பணம் அனுப்புங்கள்.

அம்மனுக்கு பூஜை செய்வதால் பல பேர்க்கு நல்லதை நடத்திக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய வளர்ச்சியை ஒவ்வொருவரும் பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து பார்த்துக்கொண்டுருக்கிறார்கள். ஒவ்வொரு பூஜையும் சிறந்த முறையில் என்னால் செய்யப்படுகிறது. சிறந்த முறையில் செய்வதற்க்கு உதவி அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவை நல்கி உள்ளேன்.

விரைவில் பூஜை தேதியை அறிவிக்கிறேன்.

https://www.facebook.com/profile.php?id=100005242867668

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: