Followers

Saturday, August 24, 2013

குலதெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வத்தைப்பற்றி அதிகமான கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. பாதிபேர் குலதெய்வத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கேட்கிறார்கள். உங்களின் வழிதோன்றல்கள் தான் இதற்கு வழி சொல்லவேண்டும். 

உங்களின் உறவினர்கள் சொல்லுவது மட்டுமே இதில் உண்மை இருக்கமுடியும்.வேறு யார் சொன்னாலும் அது தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில ஆன்மீகவாதி என்ன சொல்லுகிறார்கள் என்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகனை வணங்கி வாருங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அது அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளலாம் அதுவும மேஷ ராசி விருச்சிக ராசி செவ்வாய் உச்சமாக இருக்கின்றவர்கள் வேண்டுமானால் வணங்கிவரலாம்.

பொதுவாக முதலில் விநாயகரை வணங்கிவருவது நல்லது. குடும்பமாக இருப்பதால் உங்களுக்கு பிடித்த அம்மனை வணங்கிவாருங்கள். 


சுயநலமாக ஒரு கருத்தை சொல்லுகிறேன்.




மேல்மலையனூர் அங்களாபரமேஸ்வரியை வணங்கலாம். சூப்பர் பவர் கிடைக்கும். கேட்டவரத்தை கொடுக்கும் ஈடு இணையற்ற சக்தி கொண்ட என் தாய் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியை வணங்கினால் அது யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவாள். 

உங்களால் உங்களின் குலதெய்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதனை குலதெய்வமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இதனை குலதெய்வமாக நீங்கள் எடுப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொண்டு பூஜை முறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: