Followers

Saturday, August 10, 2013

தசாநாதன் பகுதி 12


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் பணம் வரும் என்று சொல்லிருந்தேன் பல பேர் எனக்கு போன் செய்து எனக்கு ராகு தசா நடக்கும்பொழுது பணம் வரவில்லை என்று சொன்னார்கள். உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் பக்தி வரும்.

ராகுவும் பக்தி மார்க்கத்திற்க்கு இழுத்து செல்வதில் குருவை மிஞ்சியவர். ராகு தசா நடைபெறும் பொழுது ஒருவருக்கு பக்தி மார்க்த்திற்க்கு இழுத்து செல்வதற்க்கு காரணம் முன்ஜென்மத்தில் ஒருவர் அதிக பாவம் செய்திருந்தால் இந்த ஜென்மத்தில் அவர்களின் கர்மாவை தீர்ப்பதற்க்கு அவர்களை பக்திமார்க்த்திற்க்கு இழு்த்துச்செல்வார்.

நாம் வாழ்வதற்க்கு பணம் கண்டிப்பாக தேவையான ஒன்றாக இருக்கிறது.அடிப்படை தேவையான ஒன்றாக மாறிவிட்டது. நமக்கு எந்த தசா நடந்தாலும் அந்த தசா நமக்கு பணத்தை தரவேண்டும். அனைவருக்கும் பணத்தை தந்துக்கொண்டு இருக்கிறது. ஒருவன் இன்று உயிரோடு வாழவேண்டும் என்றாலும் பணம் தேவைப்படுவதால் பணத்தை அனைத்து தசாவும் கொடுக்கிறது. என்ன என்றால் பணம் எவ்வளவு தருகிறது என்பதில் சிக்கல் இருக்கிறது.

தசா நன்றாக இருக்கும்பொழுது நமக்கு பணத்தை வாரிக்கொடுக்கிறது.தசா நாதன் நன்றாக இருக்கவில்லை என்றால் பணத்தில் பற்றாக்குறை வைத்துவிடுகிறது. உங்களுக்கு பணத்தை பற்றாக்குறை வைப்பதற்க்கு காரணம் இந்த இடத்தில் கை வைத்தால் உங்களை பலி வாங்கிவிடலாம். பணம் இல்லை என்றால் அனைத்தும் உங்களை விட்டு சென்றுவிடும்.

வறுமையில் மனைவியை சோதிக்கலாம் என்று ஒரு பழமொழி இருக்கிறது. பணம் இருக்கும்பொழுது மனைவி பாசமாக இருக்க வேண்டியதில்லை பணம் இல்லாமல் இருக்கும்பொழுது மனைவி பாசமாக இருக்க வேண்டும். இன்று பணம் இல்லாவிட்டால் மனைவி போய்விடுகிறார்கள். அவ்வளவு முக்கியதுவம் வாய்ந்தது பணம் அதனால் தான் தசாநாதர்கள் பணத்தில் கைவைத்துவிடுகிறார்கள்.

உங்களுக்கு எந்த தசா நடந்தாலும் அதற்கு நீங்கள் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லிருக்கிறேன். இதனை பலதடவை பதிவுகளில் சொல்லிருந்தாலும் யாரும் செய்தது மாதிரி தெரியவில்லை.பல பேருக்கு பரிகாரம் செய்வது என்றால் பிடிக்காது என்று நினைக்கிறேன். பரிகாரம் செய்வது எல்லாம் வீண் என்று நினைக்கிறார்கள். நமக்கு பிரச்சினை என்று வரும்பொழுது அந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவருவது என்பது மட்டுமே நமக்கு சிந்தனை இருக்கவேண்டும். அதனை விட்டுவிட்டு பரிகாரத்தின் மேல் ஆராய்ச்சி செய்துக்கொண்டுருந்தால் அடிப்படுவது நீங்களாக தான் இருப்பீர்கள்.

மறுபடியும் சொல்லுகிறேன் தசாநாதனுக்கு எப்படியும் ஒரு பரிகாரத்தை வருடத்திற்க்கு ஒரு முறையாவது செய்துவிடுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...

எனக்குப் பணம் வந்தது என்னவோ உண்மை .
அதிக காமத்தைத் தரும் ராகு பக்தியையும்
தருவாரா ? முரண்படுகிறதே ?!
ராகுதசைக்கானப் பரிகாரத்தையும்
நீங்களே சொல்லி விடுங்கள் .
கஜலட்சுமி படம் கொள்ளை அழகு. அற்புதம் .

KJ said...

Sir, enthentha dasavirku enthentha parikaram seiya vendum.

KJ said...

Thanks sir. For magara lagna , Sani at tenth place in thulam, and tenth place owner sukran at 12th place with sani aspect. How sani dasa will be ? Pl explain.