Followers

Monday, August 5, 2013

ஜாதகபலன் சொல்லும்பொழுது கவனிக்க வேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                    நாம் நிறைய ஜாதகங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பல உதாரண ஜாதங்களை உங்களுக்கு எதிர்காலத்தில் தரபோகிறேன். அனைத்திலும் ஒரு சில விசயங்களை மட்டுமே சொன்னால் கூட ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்யும்.

நீங்கள் நிறைய ஜாதங்களை பார்க்கும்பொழுது உங்களுக்கு அந்த ஜாதகங்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு அதனைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையோடு தான் இருப்பான். கடவுள் மனிதனை படைத்தாலும் ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசம் இருக்கிறது. அதே போல் ஜாதகத்திலும் ஒவ்வொரு ஜாதகமும உங்களுக்கு புதுமையான ஒன்று என்பதை மனதில் வையுங்கள்.

ஒரு சில ஜாதகங்களை பார்த்து நாம் பலன் சொன்னாலும் நாம் சொல்லும் பலன்கள் அவர்களுக்கு நடைபெறாது ஏன் என்று நாம் பார்த்துக்கொண்டு இருப்போம். பெரும்பாலான குடும்பங்களில் குலதெய்வ வழிபாடு செய்துக்கொண்டு வருவார்கள் அப்படி செய்துக்கொண்டு வரும் குடும்பங்களில் கிரகங்களின் தாக்கம் குறைவாக இருக்கும். நாம் சொல்லும் பலன் பொய்த்துவிடும்.

ஒரு சில குடும்பங்கள் மகானை பின்பற்றி வருவார்கள். அவர்களின் ஜாதகங்களிலும் நாம் சொல்லும் பலன்கள் நடைபெறாது. நான் பல ஜாதங்களை இப்படி பார்த்திருக்கிறேன். மகான்கள் அவர்களின் ஜாதகங்களில் வரும் தீயபலன்களை குறைத்துவிடுவார்கள். பொதுவாக மகான்களை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அவருக்கு பாக்கியஸ்தானம் கெட்டுவிடும்.

பாக்கியஸ்தானம் கெட்டவர்கள் அதிகம் பேர் மகான்களை பின்பற்றிவருவார்கள். ஏன் என்றால் அவர்கள் வழியில் அந்த குறையை போக்குவதற்க்காக கடவுள் செய்யும் ஏற்பாடு தான் மகான்களை பின்பற்றுவது. அதனை எல்லாம் பார்த்து தான் நாம் பலனை சொல்லவேண்டும்.

நாம் எடுத்தவுடனே கணித்துவிட்டு பலனை சொன்னால் பல நேரங்களில் நமக்கு மானக்கேடு ஏற்பட்டுவிடும். அனைத்தையும் பொறுமையாக கணித்துவிட்டு நல்ல மனநிலையில் நாம் இருக்கும்பொழுது பலனை சொன்னால் அது நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

surya said...

மகான்களை வழிபடும் ஜாதகங்களை உதாரணம் கொடுக்கலாமே.