Followers

Thursday, August 1, 2013

நல்ல பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகத்தில் நமக்கு அதிகபட்சம் கிரகங்கள் மற்றும் வருகின்ற தசா காலங்கள் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லுகிறேன்.

நீங்கள் பிறக்கும்பொழுது உங்களின் ஊரில் அட்சரேகையை வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. முழுகிரகங்களும் உங்கள் ஊரில் அந்த ஆதிக்கம் செலுத்தும் நேரத்தை வைத்து மட்டுமே உங்களின் ஜாதகபலன் வரும். நமக்கு அதிகமாக பிரச்சினை கொடுத்துக்கொண்டே அதாவது பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது என்றால் உடனே நீங்கள் அந்த ஊரைவிட்டு வெளியூரில் போய் தங்கிவிடுங்கள். நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

ஒருத்தருக்கு பூர்வபுண்ணியம் சரியில்லை என்றால் சொந்த ஊரில் அவனால் வசிக்கமுடியாது. வசிக்கவும் கூடாது பிற ஊர்களுக்கு செல்லும்பொழுது உங்களுக்கு கிரகங்களின் தாக்கம் ஒரளவு குறைகிறது இது அனுபவத்தில் நடந்திருக்கிறது அதனால் சொன்னேன். 

பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் அவனால் சொந்தஊரில் நிலைத்து இருக்கமுடியும். பூர்வபுண்ணியம் சரியில்லை என்றால் அவன் சொந்த ஊரில் இருந்தால் ஊரில் உள்ளவன் அவனை போட்டு மிதிப்பான். சொந்த ஊரை விட்டு செல்லுவது கிரகங்களின் தாக்கும் குறைக்கிறது என்று பல பேர்களை பார்த்து சொல்லுகிறேன். நாம் என்ன தான் வெளியூரில் வாழ்ந்தாலும் கோடிக்கணக்கான பணம் வைத்திருந்தாலும் அந்தளவுக்கு பேர் சொல்லுவது போல் வாழமுடியாது.

வெளியூரீல் இருந்து சென்னைக்கு வந்து தங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் கோடிக்கணக்கான பணம் செல்வம் வைத்திருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு கூட தெரியாது. அதுவே சொந்த ஊரில் இருந்தால் எப்படி இருக்கும் அந்த ஊரே அவனைப்பற்றி பேசும். ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம். ஒரு சிலர் வெளியூரில் பெயர் வாங்கலாம்.

உங்களுக்கு ஜாதகம் சரியில்லை என்றால் வெளியூர் சென்றுவிடுங்கள் இது ஒரு நல்ல பரிகாரமாக இருக்கிறது.வெளியூர் வந்துவிட்டோம் அதனால் நமக்கு பிரச்சினை இல்லை எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டு ஓவராக ஆட்டம் போடகூடாது.அடக்கிவாசிக்க வேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: