Followers

Saturday, August 10, 2013

வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரத்திற்க்கு உதவி செய்வது என்று நமது பதிவில் சொல்லிருந்தேன் அதனை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டார்கள். அவர்களுக்கு வியாபாரம் நல்லபடியாக சென்றுக்கொண்டு இருக்கிறது. அனைத்திற்க்கும் நம்து அம்மனின் அருள் மட்டுமே.

பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு இருந்தாலும் ஒரு சில நண்பர்களுக்கு மட்டுமே நான் அவர்களின் வியாபாரத்தை எடுத்து அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டு இருக்கிறேன். பல நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அனைவருக்கும் செய்து தருகிறேன்.ஒரு தொழிலை எடுப்பதற்க்கு பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது அந்த வேலைகளை செய்து முடித்து அதன் பிறகு அந்த நிறுவனத்தை உயர்த்த வேண்டும். அதனால் மட்டுமே காலதாமதம் ஏற்படுகிறது.

உங்களின் தொழில் கீழ்நோக்கி போய்க்கொண்டிருந்தாலும் அந்த தொழிலை தூக்கி நிறுத்த முடியும்.அதே நேரத்தில் நீங்கள் தொழில் செய்துக்கொண்டிருந்தால் அந்த தொழிலில் நீங்கள் தான் நம்பர் ஒன்று நினைக்கவேண்டும்.நீங்கள் அப்படி நினைக்கும்பொழுது எனது முழுசக்தியும் உங்களுக்கு தரமுடியும். 

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் கண்டிப்பாக நீங்கள் தான் என்னுடைய நிரந்தர வாடிக்கையாளராக கணக்கில் எடுத்துக்கொள்வேன்.ஏதோ சம்பாதித்தால் போதும் என்றால் கண்டிப்பாக நீங்கள் என்னை தொடர்புக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: