Followers

Wednesday, August 21, 2013

செல்வத்தை தரும் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    தனிமனிதன் ஒருவன் பொருளாதார முன்னேற்றத்தை அடைய என்ன செய்யவேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கோமாத பூஜை அல்லது கஜபூஜை செய்யலாம். கஜபூஜை என்பது யானை வைத்து செய்வது இது கொஞ்ச கடினமாக இருப்பதால் கோபூஜை செய்வது எளிதான ஒன்று.

கோபூஜையை பெரிய கோவில்களில் அங்கு கோசாலை இருந்தால் செய்வார்கள். நான் இதனை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பார்த்து இருக்கிறேன். சென்னையில் இருப்பவர்களாக இருந்தால் நீங்கள் இங்கு கூட சென்று கோபூஜையை செய்துக்கொள்ளலாம்.

இதனை நீங்கள் வீடுகளில் கூட செய்யலாம். ஒரு வெள்ளிக்கிழமை அன்று பசுமாட்டை குளிப்பாட்டி அதற்கு மாலை போட்டு உடம்பில் மஞ்சளை தடவி பசுமாட்டின் உடம்பில் ஒரு பட்டு ஆடையை போட்டு அந்த பசுவிற்க்கு தீபாராதனை காண்பித்து அந்த பசுமாட்டிற்க்கு வாழைப்பழம் மற்றும் உண்ணும் தானியங்களை  கொடுத்தாலே போதும்.

இதனை எளிதாக உங்களின் வீட்டில் நீங்களே செய்யலாம். இதற்கு மந்திரம் ஒன்றும் தேவையில்லை. இப்படி நீங்கள் செய்வதால் உங்களுக்கு பணமுன்னேற்றம் ஏற்படும். 

கிராமத்தில் உங்களின் வீடு இருந்தால் உங்களின் வீட்டில் பசு வளர்க்கலாம். எப்படிபட்ட வாஸ்து தோஷத்தையும் பசு வீட்டில் இருந்தால் அந்த தோஷம் போய்விடும்.உங்களின் வீட்டை தேடி பணம் வரும். மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அந்த பசுமாட்டிற்க்கு நீங்கள் சாம்பிராணி போட்டு தீபத்தை காட்டுங்கள்.

கஜபூஜை செய்வதும் நல்லது தான் ஆனால் அதற்கு செலவு அதிகமாக தேவைப்படும். நீங்கள் பெரியகோவிலுக்கு செல்லும்பொழுது அங்கு யானை இருந்தால் அந்த யானைக்கு தேவையான உணவுகளை வாங்கிக்கொடுத்தாலே போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: