Followers

Tuesday, August 20, 2013

லட்சுமி பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது என்னிடம் பேசும் நண்பர்கள் எல்லாம் கேட்பது லட்சுமி பூஜையை தான் கேட்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் அனைவருக்கும் பணப்பிரச்சினை இருக்கிறது என்ற நன்றாக தெரிகிறது.

என்னிடம் குரு ஒன்றை கொடுத்தால் அதற்கு பல கட்டுபாடுகளை வைத்துவிட்டு மட்டுமே அதனை கொடுப்பார்.நான் எங்கு செல்கிறேன் என்ன செய்துக்கொண்டு இருக்கின்றேன் என்பதை அவர் இருந்த இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டு தான் இருப்பார். அவரை மீறி எதனையும் செய்யமுடியாது.

நான் ஏற்கனவே பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். ஒருவருடைய ஜாதகம் எப்படி இருந்தாலும் அந்த ஜாதகனை நாங்கள் நினைத்தால் கோடிக்கான பணத்திற்க்கு முதலாளியாக மாற்றமுடியும் என்று சொல்லிருக்கிறேன். எதனை வைத்து அப்படி சொல்லுகிறோம் என்றால் கற்ற வித்தை அப்படிபட்டது. அமைந்த குரு அப்படிபட்டவர்.

நான் காடுகளில் அவருடன் போகும்பொழுது அவர் என்னிடம் சொல்லுவார் நாம் யாருக்கும் பயப்படதேவையில்லை எந்த விலங்கும் நம்மை ஒன்றும் செய்யாது ஆனால் மனிதர்களுக்கு மட்டும் நாம் பயப்படவேண்டும் என்று சொல்லுவார். ஏன் இப்படி சொல்லுகிறார் என்றால் மனிதர்களின் சுபாவம் அப்படிபட்டது.

ஒருவரை உயர்த்த வேண்டும் என்றால் பல வேலைகளை செய்யும்பொழுது மட்டுமே அவர்களை உயர்த்த முடியும். என்னிடம் வியாபாரத்திற்க்கு உதவி என்று வந்தவர்களுக்கு அவர்கள் நடந்துக்கொள்ளும் முறையை வைத்து அவர்களுக்கு இதனை செய்யலாம் என்று நினைத்து உள்ளேன். தனிப்பட்ட நபர்களுக்கு செய்வதற்க்கு வாய்ப்பு குறைவு. அனைவருக்கும் இதனை செய்ய எனக்கு அனுமதி இல்லை. அனுமதி வந்தால் கண்டிப்பாக செய்கிறேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: