Followers

Wednesday, August 14, 2013

அன்னையின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நல்லபடியாக அம்மனின் பூஜை முடிந்துவிட்டது. உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அம்மனின் அருள் கிடைக்கும். சொந்த ஊர் என்பதால் இரண்டு நாள்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உங்களுக்கு பதிவும் தரமுடியவில்லை.

அம்மனுக்கு பூஜை செய்யும்பொழுது ஏகாபட்ட மனமகிழ்ச்சியை அம்மன் தருகிறது. நான் பூஜை செய்யும்பொழுதே பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் பேசினார்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் கிடைக்கும். உங்களி்ன் கவலை அனைத்தையும் தீர்ப்பாள். கவலையை போக்குபவள் அவள் அல்லவா. 

சென்ற மாதத்தில் பூஜை செய்யும்பொழுது எனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டது. அது என்ன என்றால் நமது அம்மன் குடிக்கொண்டியிருக்கும் இடத்தில் குளம் இருக்கிறது அந்த குளம் வறண்டு இருந்ததால் சென்ற முறை ஆலயத்தை கழுவி விடுவதற்க்கு தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் சென்று வந்தேன். 

அருகில் போர்செட் வைத்திருப்பவர்கள் அந்த குளத்திற்க்கு தண்ணீரும் விடவில்லை. சென்ற முறை பூஜையில் மனதில் நினைத்தேன். எப்படியும் அடுத்தமுறை வரும்பொழுது குளத்தை நமது செலவில் போர்செட்டில் இருந்து நிரப்பிவிடவேண்டும் என்று நினைத்தேன். இந்த முறை செல்லும்பொழுது குளத்தை பார்த்தால் நிரம்பி உள்ளது. போர்செட் வைத்திருப்பவர்களே இலவசமாக குளத்தை நிரம்பிவிட்டார்கள். அம்மனின் அருளை என்ன என்று சொல்லுவது.

அம்மனிடம் நான் எதுவும் எனக்காக கேட்டதில்லை நமது தளத்திற்க்கு வருபவர்களுக்கு வேண்டுதலை வைப்பேன். நான் எதுவும் கேட்காமலே அனைத்தையும் செய்து தருகிறது. உங்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தாராளமாக வேண்டுதலை வையுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: