Followers

Monday, August 26, 2013

கடன் பிரச்சினை


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக கடன்களை வாங்கிக்கொண்டு செலவு செய்துவிட்டு என்னை தொடர்புக்கொள்கிறார்கள். என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்கிறார்கள்.

ஒருவர் கடன் வாங்குவது இயல்பான ஒன்று. அவர்கள் கடன் வாங்குவது அடிப்படை தேவைக்கு அல்லது தொழில் செய்வதற்க்காக செய்தால் நல்லது. அதனைவிட்டு விட்டு ஆடம்பரத்திற்க்காக கடனை வாங்கினால் என்ன செய்யமுடியும். ஒரு சிலர் ஆடம்பரத்திற்க்காக கடனை வாங்கி சரியாக மாட்டிக்கொள்கிறார்கள் அவர்களை யாராலும் காப்பாற்றமுடியாது.

ஏகாப்பட்ட நபர்கள் கடனால் பாதிக்கப்படுகிறார்கள். கடனை வாங்கும்பொழுதே எப்படி திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதை தயார் செய்துக்கொண்டு தான் கடனை வாங்கவேண்டும். பணத்தை கொடுக்கிறார் என்று வாங்கினால் மாட்டிக்கொள்வது நீங்கள் மட்டுமே

உண்மையை சொல்லவேண்டுமானால் கடனை திருப்பி அடைக்கும் வழி மற்றும் கொடுத்த பணம் திரும்பி தரவைப்பது கண்டிப்பாக எனக்கு தெரியாத ஒன்று. என்னுடைய குருநாதருக்கும் இந்த வழி தெரியாது.

பலபேர் பணத்தை கொடுத்துவிட்டு அல்லது பொருளை கொடுத்துவிட்டு எனக்கு திருப்பி தரவையுங்கள் என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இதனை அம்மன் செய்யாது.இதனை மட்டும் செய்தால் நல்ல வருமானம். இதனை அம்மன் செய்யாது அதனால் இதற்கு தொடர்புக்கொள்ளாதீர்கள்.

என்னை பொருத்தவரை நியாயமாக நடந்துக்கொண்டு  உங்களுக்கு பிரச்சினை என்றால் என்னால் முடிந்தளவுக்கு உதவமுடியும். அம்மனும் அதனை தான் எதிர்பார்க்கும்.என்னை நம்பாமல் இருக்கலாம் ஆனால அம்மனை நீங்கள் முழுமையாக நம்பவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை கவனிப்பது மிகவும் நல்லது. என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு விழிப்போடு இருங்கள் இல்லை என்றால் அது உங்களை விழுங்கிவிடும்.பிடித்து குழியில் தள்ளிவிடும். கடனை உருவாக்குவதில் ஆறாவது வீடு மற்றும் ஆறாவது வீட்டு தசா வல்லவர்கள் உங்களின் ஜாதகத்தில் அவரை கண்காணித்துக்கொள்வது நல்லது. அவரை சாந்தப்படுத்த என்ன பரிகாரமோ அதனை செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...

கடன் தீர அங்காரக வழிபாடும் முருகப்பெருமானின் வழிபாடும் அவசியம்.
இதனுடன் குருவையும் இரண்டாம் அதிபதியையும் வழிபட்டால்
தன சேர்க்கைக்கும் வழி பிறக்கும்.
என்ன இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் கோ பூஜையோ ,
மஹாலக்ஷ்மி பூஜையோ செல்வ வளத்திற்கு அவசியமே .
ஜோதிடத்தில் இன்னும் பல வழிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி மேடம்.

Unknown said...

தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு விளக்கு ஏற்றவும்