Followers

Sunday, August 18, 2013

அம்மனிடம் வேண்டுதல்


வணக்கம் நண்பர்களே !
                    நமது அம்மனிடம் வேண்டுதல் வைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். 

இப்பொழுது பல நண்பர்கள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றிக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு சிலருக்கு வேண்டுதல் நடைபெறவில்லை என்று சொன்னார்கள். அதன் காரணம் என்ன என்று பார்க்கும்பொழுது அவர்கள் தவறான நடத்தை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பொதுவான அங்காளபரமேஸ்வரியை பொறுத்தவரை தவறான காரியங்களுக்கு துணை போகாது. தவறான நபர்களுக்கும் துணை போகாது. உங்களை நீங்கள் சுத்தபடித்திக்கொண்டு உங்களின் வேண்டுதல்களை வையுங்கள்.நான் தவறு செய்தாலும் எனக்கு அடி உண்டு தான். 

எந்த ஒரு விசயத்தையும் நல்லவர்கள் எடுத்துக்கொள்கிறார்களோ இல்லையோ தீயவர்கள் முதலில் வந்துவிடுகிறார்கள். தீயவர்கள் எப்படியாவது இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று முனைப்போடு நிற்கிறார்கள். நல்லவர்கள் என்ன வேண்டுதலை வைக்கபோகிறோம் நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு எதனையும் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். நல்லவர்கள் வேண்டுதல் வைத்தால் உடனேயே உங்களுக்கு நடத்திக்கொடுத்துவிடும்.

நீங்கள் வேண்டுதலை வைக்கும்பொழுது இதுவரை செய்த தவறுகளை இனிமேல் செய்யமாட்டேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு முடிந்தால் ஒரு சத்தியம் செய்துவிடுவது நல்லது. வேண்டுதல்களை நீங்கள் வைத்தால் நல்லது நடக்கும்.

எனக்கு தெரிந்த பல நல்ல நண்பர்கள் கூட வேண்டுதல்களை வைக்கமாட்டாரார்கள். ஏன் என்று கேட்டால் அவர்களின் பதில் சோம்பேறி தனமாகதான் இருக்கின்றதை தவிர வேறு ஒன்றும் இல்லை.உங்களின் பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வாகதான் இது இருக்கும். உடனே வேண்டுதல்களை வைத்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: