Followers

Thursday, August 1, 2013

சுகஸ்தானம் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                    சுகஸ்தானத்தைப்பற்றி பார்த்தோம் அல்லவா. நம்மை ஈன்று எடுத்த தாயை காட்டும் இடமும். நாம் இந்த உலகத்தில் தங்கி வாழும் நமது வீட்டை காட்டும் இடமும் இந்த நான்காவது வீடு. எப்பேர்ப்பட்ட முக்கியதுவம் வாய்ந்த ஒரு இடம் பார்த்தீர்களா நாம் ஏதோ சுகஸ்தானம் என்று நமக்கு கிடைக்கும் சுகஸ்தானம் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். (நான் எழுதுவது சோதிடத்தில் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்காக எழுதுகிறேன். அவர்களின் மனநிலையை வைத்து எழுதுகிறேன். ஏகாப்பட்ட வர்க்கங்களை படித்தவர்களுக்கு அல்ல என்பதை மனதில் வைத்து படித்துக்கொள்ளுங்கள்.)

இந்த இடத்தில் ஒன்றை சொல்ல நினைக்கிறேன். ஒரு ஜாதகத்தை எடுத்தவுடன் நாம் எதனை இதுவரை பார்ப்போம் என்றால் லக்கினாதிபதி நன்றாக இருக்கவேண்டும். லக்கினாதிபதி கதாநாயகன் என்று சொல்லி்க்கொண்டு இருப்போம். லக்கினாதிபதி கதாநாயகனாக இருந்தாலும் அந்த கதாநாயகன் என்பவன் எங்கு தங்குகிறான் என்று பார்க்கவேண்டும். அவனும் வீட்டில் தான் தங்குவான். வீடு என்பது மிகமுக்கியமான ஒன்று. கதாநாயகன் கண்ட இடத்தில் தங்கினான் என்றால் கூடிய விரைவில் போய் சேரவேண்டியது தான். லக்கினாதிபதி முக்கியம என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அதேபோல் நான்காவது வீடும் முக்கியமான ஒன்று.

ஒரு சோதிடனுக்கு நான்காவது வீட்டைப்பற்றி நன்றாக தெரிந்துவிட்டால் அனைத்தையும் சொல்லிவிடுவான். நான்காவது வீடு நாம் தங்கியிருக்கும் வீட்டை காட்டும் இடம் என்று சொன்னேன் அல்லவா. நமது வீட்டிற்க்கு மிக முக்கியமான இடம் என்று சொன்னால் அது அந்த வீட்டின் ஈசானிய மூலை மட்டுமே. ஈசானிய மூலையில் இருந்து மட்டுமே அந்த வீட்டிற்க்கு சக்தி கிடைக்கும். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். 

சக்தி எப்படி கிடைக்கிறது என்று மட்டும் தெரிந்துவிட்டால் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜாதகபலன் சொல்லிவிடமுடியும். அதேப்போல் இந்த வீட்டிற்க்கு மட்டும் ஒருவன் பரிகாரம் செய்யமுடியாது என்பது உண்மையான ஒரு விசயம். எப்படி என்றால் ஈசனை அவ்வளவு எளிதில் தொட்டுவிடமுடியாது. கொஞ்சம் தவறினாலும் அப்படியே ஒன்றும் இல்லாத சூன்யநிலைய ஏற்படுத்திவிடுவார் ஈசன்.

வாஸ்து முறையில் கூட இதனை சொல்லுவார்கள் ஈசானிமூலை முக்கியமான ஒன்று. சக்தி அங்கிருந்து புறப்பட்டு வீடு முழுவதும் சென்று பரவும். அந்த சக்தி நமது வீட்டிற்க்கு முக்கியம். இந்த சக்தியை நாம் அதிகமாக பெறுவதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் சிவனடியார்களை வீட்டிற்க்கு வரவழைப்பது மட்டுமே அங்கு சக்தியை கூட்டமுடியும். வேறு எந்த வழியும் கிடையாது.

நான் இன்னும் என்ன பிரச்சினை வரும் என்று சொல்லாமல் பரிகாரத்தை சொல்லிவிட்டேன். பிரச்சினையை அடுத்த பதிவில் இருந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

தமிழ்செல்வன் said...

hello Sir...
my birthchart... it is Muthuna Lagnam....
Lagnathipathi Puthan & sugasthanathipathi Puthan also Placed in 8th place from Lagna,with suryan...

in 4th place Kethu...

is it good or bad...

rajeshsubbu said...

வணக்கம் முழு ஜாதகத்தையும் பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரியும். நன்றி