Followers

Thursday, August 8, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவின் பலன்களை பார்த்து வருகிறோம். அந்த தொடர்ச்சியாக இந்த பதிவில் பார்க்கலாம்.

லக்கினத்தில் ராகு இருந்து தசா நடைபெற்றால்

                                            லக்கினம் என்பது உடல் அல்லவா. உடல் விஷமாக மாறுவதற்க்கு வாய்ப்பு அதிகம். உடல் ஒவ்வாமை ஏற்படும். துணைவரர் இருந்தால் அவருடன் சண்டை ஏற்படும். நீங்கள் கூட்டுத்தொழில் செய்தால் அவருடன் சண்டை ஏற்பட வாய்ப்பு வரும். எதனையும் சரியாக புரிந்துக்கொள்ளமுடியாத நிலை ஏற்படும்.

இரண்டாவது வீட்டில் இருக்கும் ராகு தசாவில் 
                                           ராகு இரண்டாவது வீட்டில் இருக்கும் நிலையை பொருத்து பலனை தரும். 

ராகு நன்றாக இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பசுற்றுலா செல்ல வைக்கும். வெளிநாட்டு உணவு வகைகளை விரும்பி உண்ண வைப்பார். திடீர் பணவரவுகளை ஏற்படுத்திக்கொடுப்பார். பிறமொழி பேச வைப்பார்.

ராகு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் பணவரவு இருக்காது. பேசும் வார்த்தையால் பிரச்சினை ஏற்படுத்திவிடுவார். சாப்பிடும் உணவு விஷமாக இருக்கும். கெடுதல் வழியை பின்பற்றி பணத்திற்க்கு அலைய வைப்பார். 

மூன்றாவது வீட்டில் ராகு தசாவில் 

ராகு நன்றாக இருந்து தசா நடைபெற்றால் நல்ல பயணத்தை அடிக்கடி ஏற்படுத்திக்கொடுப்பார் . அடிக்கடி கோவில்கள் சென்று வருவதற்க்கு வாய்ப்பு ஏற்படும். சில பேருக்கு வெளிநாடுகள் செல்லுவதற்க்கு வாய்ப்பு ஏற்படும். இனிமையான இசையை அதுவும் வெளிநாட்டினரின் இசையை கேட்க வைப்பார். இளைய சகோதர சகோதரிகள் வழியாக உதவி கிடைக்கும். அவர்களிடம் பாசமாக இருக்க வைப்பார். அவர்களும் நலமா இருப்பார்கள்.உங்களின் பக்கத்து வீட்டில் அயல்நாட்டினர் குடியிருக்க வாய்ப்பு ஏற்படும். அவர்கள் உங்களுடன் பாசமாக இருப்பார்கள். அயல்நாட்டு காலசாரத்தை கற்பீர்கள்.

ராகு கெடுதல் தரும் நிலையில் இருந்து தசா நடைபெற்றால் பயணம் செய்யும்பொழுது விபத்து ஏற்படும். காதில் நோய் ஏற்படும். அடிக்கடி செல்வது மதுகடையாக இருக்கும்.இளைய சகோதர சகோதரிகள் நலமாக இருக்கமாட்டார்கள். அவர்கள் உங்களுடன் சண்டை போடுவார்கள். உங்களின் பக்கத்துவீட்டுக்காரர்களிடம் சண்டை மட்டுமே வரும். பக்கத்தில் உள்ளவன் பாம்பு போல் எந்த நேரமும் கொத்துவதற்க்கு தயாராக இருப்பார்.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: