Followers

Saturday, August 17, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு அமானுஷ்ய விசயத்தைப்பற்றி பார்ப்போம். இது உண்மையான ஒரு செயல். நடத்தி பார்த்தது நான் தான் அதனால் நீங்கள் நம்பலாம்.

எனக்கும் ஒருவருக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. (நீ எங்கு தான் பிரச்சினை இல்லாமல் இருந்திருக்கிறாய் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது) அந்த பிரச்சினை முற்றிவிட்டு இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போய்விட்டது. இந்த பிரச்சினைக்கு காரணம் இவரின் அக்கா ஒருவிதத்தில் காரணமாக இருந்தார். சரி மேட்டருக்கு வருவோம்.

இரும்பு அடித்தவன் கை சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள். நாம் ஏதாவது ஒன்றை கற்றால் அதனை செயல்படுத்தி பார்ப்போம் என்று மனது நினைக்கும்.ஒரு வித்தை ஒன்றை கற்று இருந்தேன். அதாவது என்ன என்றால் இந்த உலகத்தில் நாம் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு வெளியில் அதாவது எங்கு வேண்டுமானாலும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

அடுத்த இடத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் மட்டுமே நாம் அவர்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக செய்யமுடியும். இதனை நான் அடிக்கடி செய்வது கிடையாது. கொஞ்சம் கடினமாக இருப்பதால் இதனை செய்வது கிடையாது. நான் என்ன செய்தேன் இரண்டு வாரங்களுக்கு முன்பு சரி என்ன நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று எண்ணி செயலில் இறங்கினேன்.

நான் அந்த வீட்டிற்க்குள் போய் பார்க்கலாம் என்று சென்றேன் அதாவது நான் சென்னையில் இருக்கின்றேன் அவர்கள் சுமாராக 400 கிமீ தொலைவில் இருக்கிறார்கள். அவரின் வீட்டிற்க்குள்ல் சென்றேன் இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்த வீட்டில் குலதெய்வம் இருந்தால் இப்படி நுழையவிடாது. உள்ளே செல்வது கடினம். இப்பொழுது எந்த வீட்டில் ஒழுங்காக குலதெய்வம் இருக்கிறது. உள்ளே சென்றால் அந்த நபரி்ன் அக்காவிற்க்கு ஒரு கைகுழந்தை இருக்கிறது. 

என்னோடு மனக்கசப்பு ஏற்பட்டபொழுது அவரின் அக்கா கர்ப்பிணியாக இருந்தார்கள். இப்பொழுது அந்த அக்காவிற்க்கு அழகான பெண்குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையை பார்க்கும்பொழுது அந்த குழந்தை என்னை அடையாளம் தெரிந்துக்கொண்டது. 

உங்களின் வீடுகளில் உள்ள செல்லபிராணிகளுக்கு கால்நடைகளுக்கு மற்றும் கை குழந்தைகளுக்கு நல்ல சக்தி மற்றும் கெட்டசக்தியை அடையாளம் காணும் சக்தி இருக்கும்.

அந்த பெண்குழந்தைக்கு குரு கிரகத்தின் பலம் குறைவாக இருக்கிறது. குரு ரிஷபத்தில் இருக்கும்பொழுது பிறந்த குழந்தை. அதோடு ஜாலியாக விளையாடிவிட்டு வருவது தற்பொழுது என்னுடைய பொழுதுபோக்கு. 

அந்த குழந்தை சம்பந்தமே இல்லாமல் சிரிக்கும். ரொம்ப ஜாலியாக இருக்கும். நான் அதனை அழ வைப்பதில்லை. குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லா. அதனால் அதனிடம் மகிழ்ச்சியை மட்டும் ஏற்படுத்துவது எனது செயல்.

எதிரியாக என்னை பாவிக்கும் ஒரு இடத்தில் நான் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வீட்டுக்குள் சென்று அவரின் குழந்தையை பார்க்கும்பொழுது எப்படிபட்ட எதிரியை அவர்கள் சம்பாதித்து உள்ளார்கள் என்றால் பாருங்கள். அவர்களுக்கு பெண்குழந்தை பிறந்து இருக்கிறது என்பது எனக்கு கண்டிப்பாக தெரியாது. நான் இப்படி உள்ளே செல்லும்பொழுது மட்டுமே அதனை பார்க்கமுடிகிறது.

இந்த பதிவை அவர்கள் பார்த்தது கிடையாது என்று நினைக்கிறேன். அவர்கள் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒன்றுமே புரியாது எப்படி இப்படி செய்கிறான் என்று நினைப்பார்கள்.

ஆன்மீக உலகம் என்பது இப்படி எல்லாம் நடக்குமா என்று நீங்கள் நினைப்பது எல்லாம் அங்கு நடக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: