Followers

Friday, August 23, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 11


வணக்கம் நண்பர்களே!
                    மீண்டும் சென்னையில் மின்தடை அதிகம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். நேற்று மாலை நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இன்று மதியம் இரண்டு மணியில் இருந்து மின்தடை ஏற்பட்டு இப்பொழுது தான் வந்தது. இன்று பத்து பதிவாவது போடலாம் என்றால் தடை இப்படி ஏற்பட்டுவிட்டது. சரி சொல்லவநத் செய்தியை பார்க்கலாம்.

ஒரு நண்பர் ராகு காமத்தையும் தருகிறது பக்தியையும் தருகிறது இது முரண்படுகிறதே என்று கேட்டுருந்தார். அதற்கான பதிலை பார்த்துவிடலாம். பொதுவாக அனைத்து கிரகங்களும் பக்தியை தருவதற்க்கு தான் வேலை செய்துக்கொண்டு இருக்கிறது. ராகு ஐந்த அல்லது ஒன்பதாவது வீட்டில் அமரும் பொழுது அதிகமான பக்தியை ஒருவருக்கு கொடுக்கிறது.

ஒருவருக்கு ராகு இந்த மாதிரி அமைவது கடுமையான பிதுர் தோஷத்தை ஏற்படுத்தும் முன்ஜென்மத்தில் ஒருவர் கடுமையான பாவங்களை செய்யும்பொழுது இந்த ஜென்மத்தில் பக்தி பக்தி என்று ராகு அலைய வைப்பார்.
அதிகமான பக்தியை நோக்கி அவர் செல்லும்பொழுது அவரின் பாவங்களை போக்குவதற்க்கு அது தான் வழி என்று கூட அமையலாம்.

ராகு தசா ஆரம்பித்தவுடன் ஒரு மனிதனுக்கு காமம் அதிகரிக்க செய்வதன் நோக்கம் ஒருவன் காமத்தில் திருப்தி அடைந்தால் அவன் அதனைவிட மேலான ஒன்று செல்வான் என்று ராகு அப்படி செய்வார்.

ஒரு சிலருக்கு ராகு தசா ஆரம்பித்தவுடன் கோவிலுக்கு சைட் அடிக்காவது செல்வான். அதில் தோல்வி அடைந்து மறுபடியும் பக்திக்காக அவன் திரும்புவான். இந்த மாதிரி பல ஜாதங்களை நான் பார்த்து இருக்கிறேன்.கெடுதல் தரும் கிரகங்கள் கெடுதலையும் தரும் அதே நேரத்தில் பக்தியையும் தரும். எல்லாம் இறைவனின் திருவிளையாடல் அன்றி வேறு ஒன்றும் இல்லை.

ராகு எதிராக கேது இருக்கிறார். அவரின் குணமும் ராகுவால் கொடுக்கமுடியும். கேது தான் ஞானகாரகன். அதனால் ஒருவனுக்கு ஞானத்தையும் தரவல்லவர் ராகு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Anonymous said...

இருப்பதை எண்ணாது மேலான அடுத்ததை எண்ணுவதே
வாடிக்கை . நல்லதொரு விளக்கம் அளித்தமைக்கு நன்றி !