Followers

Wednesday, August 14, 2013

தன்னை தயார்படுத்துங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    தன்னை தயார்படுத்திக்கொள்வதற்க்கு ஒரு நேரம் வருகின்றது என்றால் அது தான் நமக்கு கெடுதலை தரக்கூடிய நேரமாக இருக்கும். 

உங்களின் சுயமுன்னேற்றத்திற்க்கு தேவையான அனைத்து அறிவையும் பெறக்கூடிய ஒரு காலம் என்பது நமக்கு கெடுதலை தரும் கிரக நிலைகளில் மட்டுமே தன்னை ஒருவன் முழுமையாக தயார்படுத்திக்கொள்ளும் நேரமாகும். ஒருவருக்கு அஷ்டமசனி ஆரம்பித்து நடைபெறும்பொழுது அவர் அனைத்து வழியிலும் கஷ்டபடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அவர் என்ன செய்ய வேண்டும் என்றால் வரப்போகின்ற நல்ல காலத்திற்க்கு இப்பொழுதே தயார்படுத்த வேண்டும்.

ஒரு வியாபாரம் ஆரம்பிக்கவேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு கெடுதலை தரும் நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுது நீங்கள் ஆரம்பிக்ககூடாது அந்த கெடுதல் தரும் நேரத்தில் நீங்கள் அந்த தொழில் சார்ந்த செய்திகளை சேகரித்துக்கொள்ளவேண்டும். 

எனக்கு கெடுதல் தசா நடைபெறும்பொழுது நான் எந்தவித புதுமுயற்சியிலும் ஈடுபடவில்லை. முழுமையாக ஆன்மீகம் சார்ந்த விசயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். கெடுதல் தரும் காலங்களில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். நல்ல நேரங்களில் அதனை வெளிப்படுத்த வேண்டும்.

பல பேருக்கு தசாவின் சுயபுத்தியில் கெடுதலை சந்திக்கிறார்கள். அப்படி சந்திக்கும் காலங்களில் அவர்கள் கடுமையான துன்பத்திற்க்கு ஆளாகிறார்கள் அப்பொழுது அவர்கள் மனதை விட்டுவிடுகிறார்கள். உங்கள் ஜாதகத்தின் சுயபுத்தியில் கெடுதல் நடைபெறும் பொழுது அது உங்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விசயமாக தான் இருக்க வேண்டும். ஏன் என்றால் பிறகு வரும் புத்திகள் நல்லது நடைபெறபோகின்றது என்ற காரணத்தால் நீங்கள் மகிழ்வோடு சுயபுத்தியை எதிர்நோக்க வேண்டும்.

சுயபுத்தி கெடுதல் தரும்பொழுது உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொண்டுவி்ட்டால் பிறகு வரும் புத்திகளில் நீங்கள் வெற்றியாளன்.

எப்பொழுது உங்களுக்கு கெடுதல் நேரம் வந்தாலும் அப்பொழுது நீங்கள் மனம் தளராமல் உங்களை தயார்படுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கிக்கொள்ளுங்கள். கெடுதல் தரும் நேரங்களில் நீங்கள் உடல் உழைப்பை மட்டும் முதலீடாக போடுங்கள். பணத்தை முதலீடாக போட்டுவிடாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: