Followers

Thursday, August 29, 2013

அன்பான வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பிளாக்கின் வழியாக ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு என்று ஹோமம் மற்றும் பூஜைகளை நடத்திக்கொடுக்க என்னை கூப்பிடுகிறார்கள். இதில் கவனிக்கப்படவேண்டியவற்றை இப்பதிவில் தருகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து என்னை கூப்பிடுவதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களி்ன் வீட்டில் இதனை செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நல்லது நடைபெறும். நீங்கள் உங்களின் குலதெய்வத்தை வணங்கிவிட்டு என்னை கூப்பிட்டால் நல்ல விஷேசமான ஒன்று. எங்களின் தெய்வம் வழியாக உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நல்லது செய்துதரும்.

நீங்கள் என்னைப்போல் பல பேர்களிடம் அதாவது சாமியார்களிடம் தொடர்பு வைத்திருக்ககூடாது. ஏன் என்றால் இப்பொழுது மக்கள் பல சாமியாரை போய் பார்த்து வருவது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு செயலை செய்ய சொல்லுவது எல்லாம் கூடாது. ஏன் என்றால் நாங்கள் செய்யும் பொழுது அடுத்தவர்களின் தலையீடு வரும்பொழுது எங்கள் தெய்வம் ஒன்றும் செய்யாது. 

எங்களுக்கு பெயர் எடுத்துக்கொடுக்க மட்டுமே எங்கள் தெய்வம் வரும். பிறரும் வந்து அதில் ஒரே சிக்கல் மட்டுமே மிஞ்சும்.எங்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது எங்களின் தெய்வம்.பிறர் மீதும் நம்பிக்கை வைத்திருந்தால் இது ஒன்றும் செய்வதில்லை.நீங்கள் கோவில் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவைகளை நம்பலாம். எங்களைப்போல் உள்ளவர்களோடு நீங்கள் தொடர்பு வைக்காமல் இருந்தால் நாங்கள் செய்தவுடன் உங்களுக்கு பலன் தரும்.

நீங்கள் பல பேர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை செய்ய சொல்லி உங்களின் பணத்தை மற்றும் நேரத்தை வீண் செய்யவேண்டாம். நாங்கள் உங்களின் வீடுகளுக்கு வந்தாலே போதும் உங்களுக்கு நல்லது நடக்கும். பல பேர்களுக்கு இது நடந்து உள்ளது. அதைப்போல் நாங்கள் செய்து தருவதும் உங்களுக்கு நல்லது நடக்கும் அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை. எப்படிபட்ட ஒத்துழைப்பு என்றால் ஊரில் உள்ள ஆன்மீகவாதிகள் எல்லோரிடமும் சென்று வந்தால் எங்களால் ஒன்றும் நடைபெறாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: