Followers

Monday, August 26, 2013

நம்பிக்கை


வணக்கம் நண்பர்களே!
                    நான் இருக்கும் அடையார் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குல்பி ஐஸ் விற்க்கும் நபர் அறிமுகமானர்.  இவர் இரவில் குல்பி விற்க்கும்பொழுது எதைச்சயாக அறிமுகம் ஆனார். இவர் என்னை அடிக்கடி நான் இருக்கும் தெருவில் சந்திப்பார். அவரிடம் குல்பி வாங்குவது கிடையாது. சும்மா பேசுவார். 

நான் டிராவல்ஸ்ஸில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் சொல்லிருந்தேன். ஒரு நாள் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது எனது நண்பர் வந்தார். வந்தவர் எனக்கு கொஞ்சம் பிரச்சினை நாளைக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் வீட்டுக்காக வா என்றார். சரி வருகிறேன் என்று சொல்லிருந்தேன். என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார் என்னிடம் நீங்கள் சோதிடம் பார்ப்பீர்களாக என்றார். நானும் பார்ப்பேன் என்றேன். என்னிடம் ஜாதகம் இல்லை கைரேகை பார்த்து சொல்வீர்களா என்றார்.

உன்னுடைய பிறந்த தேதி நேரத்தை சொல்லு என்று சொன்னேன். வீட்டில் கேட்டு சொல்லுகிறேன் என்றார். நான் வெளியூர் சென்றதால் ஒரு வாரம் பார்க்கவில்லை. ஒரு வாரம் சென்றபிறகு வந்து பார்ததேன். அவர் என்னை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தார். 

அவரை பார்த்து பலனை சொன்னேன். அவர் என்னை தினமும் என்னை வந்து பார்க்காமல் இருக்கமாட்டார். அவன் என்னிடம் சொன்னது எனது குடும்பம் வடநாட்டில் உள்ளது நான் இங்கு வந்த குல்பி விற்கிறேன். எனது அண்ணன் ஊரில் சிறிய கடைவைத்துள்ளார் என்றார்.

அவன் என்னிடம் சார் குல்பி ஒரு நாள் நன்றாக ஒடுகிறது. ஒரு நான் சரியாக செல்லமாட்டேன்கிறது என்றார். உன் குல்பி தினமும் விற்க நான் ஒன்றை செய்கிறேன் உனக்கு நல்ல வியாபாரம் நடக்கும் என்று சொல்லிருந்தேன். 

அம்மனை வைத்து அவனுக்கு உதவ ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் நல்ல வியாபாரம் அவன் என்ன செய்வான் என்றால் தினமும் என்னை வந்து பார்ப்பார். 20 ரூபாய் தந்துவிடுவான். எனக்கு வேண்டாம் என்று சொல்லியும் விடாமல் வைத்துவிட்டு போய்விடுவார். 

எனது நண்பர்கள் எல்லாம் சொல்லுவார்கள் உனக்கு மட்டும் தான் இப்படி யோகம் எல்லாம் இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள். உண்மையில் நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு அப்பொழுது தெரியாது.

இதனை எனது குருநாதரிடம் சொன்னேன். சாமி இப்படி ஒருவன் என்னிடம் இருக்கிறான். அம்மனை வைத்து அவனுக்கு உதவி செய்து உள்ளேன். அவனும் நன்றாக நடந்துக்கொண்டு உள்ளான் என்றேன். உடனே அவர் அவனை வேறு தொழிலுக்கு மாற்று என்றார். அவனிடம் இதனைப்பற்றி சொன்னேன். அந்த நேரத்தில் ஆயுதபூஜை நேரம் வருவதால் ஊருக்கு செல்வதற்க்கு சொல்லி இருந்தார்.

 நான் அவனிடம் ஊரில் இருந்து வரும்பொழுது உன் ஊரில் இருந்து ஆட்களை அழைத்து ஏதாவது ஒரு கட்டிட வேலையாவது செய்வதற்க்கு ஆளை அழைத்துவா என்றேன். அவன் ஊரில் இருந்து திரும்பும்பொழுது ஆட்களை அழைத்துவந்தான். 

மூன்று பேர்களை அழைத்து வந்தேன். எனக்கு தெரிந்து கட்டிடம் கட்டுபவர்களிடம் சொல்லி இவனையும் இவர்களின் ஆளையும் அங்கு போகசொல்லி அனுப்பியிரு்ந்தேன்.படிப்படியாக முன்னேறி இன்று தனியாக கட்டிடம் கட்டி தந்துக்கொண்டு இருக்கிறான். அவன் வளர்வதற்க்கு அம்மனின் உதவி செய்ததால் அவன் இன்று நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளான். 

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் அவன் அம்மனின் மேல் வைத்த நம்பிக்கை மற்றும் என்னையும் என்னுடைய குருநாதரின் மேல் இருந்த மரியாதை. அம்மன் இவனுக்கு அனைத்தையும் பூர்த்தி செய்துக்கொடுத்தது.வடநாட்டில் இருந்து வந்து நம்பிக்கை வைத்த முதல் ஆள் இவன் தான். இப்பொழுது நிறைய பேர் இருக்கிறார்கள். 

அனைத்தையும் கற்று முடித்த பிறகு அதனை செயல்படுத்தி பார்த்த பிறகு தான் பிளாக்கை எழுதவந்தேன். நமது பிளாகை படித்துவிட்டு இப்பொழுது பல பேர் பயன் அடைந்து வருகிறார்கள்.

அம்மனிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். நம்பிக்கை மட்டும் வைத்து இருந்தால் உங்களை கண்டிப்பாக மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அதுவும் குறுகிய காலத்தில் செல்லமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: