Followers

Saturday, August 24, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே !
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் சோதிடத்தை வைத்து ஒன்றை சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதனை அலசி ஆராய்ந்து பார்த்து அதற்கு தீர்வை நாங்கள் தருவது வழக்கம். அனைத்திற்க்கும் ஜாதகம் ஒரு கைடு மாதிரி வைத்திருப்பது வழக்கம். ஒருவருக்கு பூர்வபுண்ணியத்தில் அதாவது ஐந்தாவது வீட்டில் சனி அமர்ந்தால் அவருக்கு அனைத்திலும் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். அப்படி வரும் நபர்களுக்கு பரிகாரம் செய்வது எப்படி என்று பல நாட்கள் யோசித்து இருக்கிறேன். எப்படி பரிகாரம் செய்தாலும் எடுபடமாட்டேன்கிறது. பிரச்சினைதான் சம்பந்தப்பட்ட நபருக்கு வந்தது.

இதனை எடுத்துக்கொண்டு எனது குருநாதரிடம் அணுகி இருந்தேன். இதற்கு நீங்கள் ஆலோசனையை தாருங்கள் என்று கேட்டேன். அப்பொழுது அவர் சொன்னார். சனியை மாற்றிவிடு என்றார். எப்படி சாமி என்றேன். சனி கிரகம் எங்கு இருந்தால் நல்லது செய்யும் என்றார் அதற்கு நான் ஆறாவது வீட்டில் இருந்தது என்றால் பரவாயில்லை சாமி அங்கு நிற்க்கும்பொழுது நல்லது செய்யும் என்றேன். அங்கேயே மாற்று என்றார்.

என்ன சாமி காமெடி செய்கிறீர்கள் எப்படி கிரகத்தை மாற்றமுடியும் என்றேன். என் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்றார். ஆம் இருக்கிறது சாமி என்றேன். அப்ப மாற்று டா என்றார். வழி சொல்லுங்கள் என்றேன்.

ஒரு சின்ன பூஜையை செய் இந்தா மந்திரம் என்று இரண்டு வரிகளில் ஒரு மந்திரத்தை தந்தார்.அதனை ஒருமுறை செய்தேன் அவ்வளவு தான். சனி ஆறில் இருந்து என்ன செய்யுமோ அதனை செய்தது.

எப்படி சாத்தியம்?

அவர் கொடுத்த மந்திரம் அதர்வண வேத மந்திரம். அதர்வண வேத மந்திரத்தை கொண்டு ஒருவன் நினைத்தை அடையமுடியும் என்னும் பொழுது கிரகத்தை மாற்றுவது ஒரு பெரிய வேலை இல்லை. 

நீங்கள் நினைக்கலாம் அப்படி என்றால் ஒருவன் இறக்கவே வேண்டியதில்லையே என்று நினைக்கலாம். ஆம் இறக்காமல் இருக்கலாம் இதனை தான் சித்தர்கள் செய்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்பினால் நம்புங்கள்.

மந்திரத்தை கேட்காதீர்கள் அது குருவின் அனுமதி இல்லாமல் வெளியில் தரமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.   

1 comment:

Anonymous said...

நானும் இதைப் பற்றி மிகவும் யோசித்து உண்டு .
தீர்வாக உக்ர தேவதை வழிபாடும் , பிரத்யதிதேவதை வழிபாடும் ,
ஜீவசமாதி செல்லலும் தான் நான் நினைத்தது . நடந்தது .

உங்கள் குரு கூறி இருப்பது அற்புத , புதிய முறை .
நான் இதையே சற்று வேறு விதமாக யோசித்து வைத்து இருந்தேன் .

என்னெவெனில் , ராமர் ஜாதகம் , சீதா ஜாதகம் போல் நம் ஜாதகத்தில்
பிரச்சனை தரும் கிரஹங்களை மாற்றி எழுதி பூஜை அறையில் வைத்து
மந்திரம் ஜபித்தல் என்பதே அது .

நீங்கள் விரும்பினால் இதனை தங்கள் வாடிக்கையாளுருக்கும்
பரிந்துரைக்கலாம் . உளவியல் ரீதியாகவும் நல்ல பலனைத் தரும் என நினைக்கிறேன் .
ஆனால் எந்த ஸ்தானத்தில் மாற்றுவது என்பதை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும்.
ஆறு என்பதனை விட மூன்று அல்லது எட்டு சரியாக இருக்குமோ என்பது என் தாழ்மையான கருத்தாகும்.


நான் இன்னும் அதனை பல காரணங்களால்
நடைமுறைப்படுத்தவில்லை .

உங்களின் இந்த பதிவு என் எண்ணத்திற்கு உற்சாகம் ஊட்டி
மறைமுகமாக அதாவது உங்கள் + உங்கள் குருநாதரின் மூலமாக
எனக்கு அம்மனின் ஆசி கிட்டியது போலுள்ளது.
இனி நான் என் எண்ணத்தை செயல்படுத்த உள்ளேன்.
கடவுள் பச்சைக்கொடி காட்டி விட்டார்.

இது மட்டும் அல்ல . ஜாதக கதம்பத்தில் வரும்
நிறைய விஷயங்கள் என் எண்ணங்களோடும் ஐடியாக்களோடும்
ஒத்துப்போகின்றன .

பகிர்விற்கு கோடானு கோடி நன்றிகள் சார் !