Followers

Wednesday, August 21, 2013

வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் என்ன நீங்க தொழில் செய்பவர்களுக்கு மட்டும் உதவுகின்றீர்கள் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு உதவமாட்டீர்களா என்று கேட்டார்கள். ஜாதககதம்பத்தில் இருக்கும் விசயங்களை எடுத்து ஒருவர் பின்பற்றினாலே போதும் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். 

நான் எங்கு சென்றாலும் எப்படியும் பதிவை தந்துவிடவேண்டும் என்று தான் நினைப்பேன். அதுவும் முடிந்தளவுக்கு அதிகமான பதிவை தரவேண்டும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் இதில் ஆன்மீகதாகத்திற்க்காக மட்டுமே அதிகம் பேர்கள் வருகின்றார்கள் என்பதை நான் அறிவேன். என்னால் முடிந்தளவுக்கு தந்துக்கொண்டுருக்கின்றேன்.

எனக்கு ஆன்மீகத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு நிறைய விசயங்கள் என்னிடம் இருக்கின்றது. நான் ஸ்டாப் என்று சொல்லுவார்களே அதுபோல் எழுதிக்கொண்டே போகலாம். அனைத்தும் எனது சொந்தகருத்துகளை வைத்து தான் எழுதுகின்றேன். எந்த புத்தகத்தில் இருந்தும் எடுத்து எழுதுவதில்லை நீங்கள் படிக்கும்பொழுது தெரிந்து இருக்கும்.

நான் எவ்வளவு தான் சொன்னாலும் நீங்கள் இதனை படித்துவிட்டு எப்படி நாம் ஆன்மீகவாழ்க்கை வாழ்வது என்று எண்ணி சிறிய சிந்தனை செய்தாலே போதும் உங்களிடம் ஆன்மீகம் வந்துவிடும். ஆன்மீகம் என்பது உங்களின் உடையை மாற்றுவது கிடையாது உங்களை மாற்றுவது. என்னை பார்க்கின்றவர்கள் கேட்பார்கள் உங்களிடம் ஆன்மீகத்தில் உள்ள சிறு அங்கம் கூட இல்லையே என்பார்கள். அவர்கள் நினைப்பது புரிகிறது. வெளியில் தெரிவது போல் மாட்டிக்கொண்டு அலைவதால் ஒன்றும் நடைபெறபோவதில்லை. உங்களின் மனதில் மாற்றம் வேண்டும்.

உங்களுக்கு தேவையான அனைத்து ஆன்மீக சம்பந்தமான விசயங்கள் வரும். இதனை எடுத்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகவாழ்க்கை வாழலாம். எனக்கு தேவை இதனை பல பேருக்கு நீங்கள் சொன்னால் போதும். நீங்களே சொல்லுவது போல் சொல்லலாம் அல்லது நமது பிளாக்கைப்பற்றி சொல்லுங்கள். எனக்கு ஜாதககதம்பத்திற்க்கு வரும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் போதும் எழுதி தள்ளிவிடுவேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: