Followers

Monday, August 19, 2013

விளக்கம்



 வணக்கம் நண்பர்களே !
                   லட்சுமி விரதம் என்று சிறப்பு பதிவை தந்தேன். அதற்கு பல பேர்களிடம் பலவிதமான கருத்தை சொன்னார்கள். பல பேர் ஜாதககதம்பத்தை நிறுத்திவிடுவீர்களா என்றும் கேட்டார்கள். கண்டிப்பாக எந்த காரணத்தை கொண்டும் ஜாதககதம்பத்தை நிறுத்தமாட்டேன்.

நமக்கு பல கோடி பணம் வரும் ஆனால் பல பேர்களின் ஆத்மாவை திருப்தி படுத்தும் வாய்ப்பை ஆண்டவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. எனக்கு அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்துருக்கிறான். அந்த வாய்ப்பை செய்ய வேண்டியது எனது கடமை. தொடர்ந்து பதிவு வரும்.

சாப்ட்வேர் கம்பெனி வேலை எல்லாம் சிறிய நேரம் எனக்கு இருந்த போதும். ஏன் என்றால் நான் போய் வேலை செய்துக்கொண்டு இருக்கபோவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும் நம்மிடம் இருக்கும் ஆட்கள் வேலை செய்யபோகிறார்கள்.

இரண்டு நாட்களில் பல பெரிய கம்பெனிகளில் வேலை செய்துக்கொண்டிருக்கும் நண்பர்கள்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். அனைவரும் சொன்னது என்ன என்றால் இவ்வளவு நாட்கள் இருந்தும் நாங்கள் யோசிக்கவில்லை என்று சொன்னார்கள்.

 உங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்ளுவது என்ன என்றால் அனைவராலும் அனைத்தையும் சாதிக்கமுடியும்.இதனை நான் புரிந்துக்கொண்டு இருப்பதால் அனைத்திலும் என்னால் செய்யமுடிகிறது. படிக்காத நானே செய்யும்பொழுது நீங்கள் எளிதில் செய்யமுடியும் என்பதை புரியவைப்பதற்க்கு மட்டுமே இந்த நிகழ்வை தெரியபடுத்தினேன்.

நான் சாப்ட்வேர் கம்பெனியில் சம்பாதிப்பதுவிட இப்பொழுது வியாபாரத்திற்க்கு என்று உதவிச்செய்துக்கொண்டிருக்கும் செயலில் அதிகமாக சம்பாதிக்கமுடியும்.  

நீங்கள் பெரிய கம்பெனியி்ல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது வெளியில் என்ன நடக்கிறது என்றும் பார்க்கவேண்டும். நமது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. நான் இந்தியாவில் இருந்துக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள வேலைகளை எடுப்பதற்க்கு காரணம் அந்தளவுக்கு எனக்கு தொடர்பு இருப்பதால் மட்டுமே செய்யமுடியும். தொடர்புகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்து தான் நமது வெற்றி.

கடைசியாக சொல்லுவது ஜாதககதம்பம் என்பது எனது உயிர். இதில் எழுதுவது எனக்கு மிக பிடித்த ஒன்று. கண்டிப்பாக பதிவு வந்துக்கொண்டிருக்கும். தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: